தேசியசினிமாதினம் வருகிற 16-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்த தேசியசினிமாதினத்தன்றுஅனைத்து வயதினரையும் ஒன்றிணைத்து திரைப்படங்கள் வாயிலாகஅந்த நாளை ரசிக்க வைக்கும் நோக்கிலும், திரையரங்குகள் வெற்றிகரமாக மீண்டும் திறக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையிலும் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, மல்டிபிளக்ஸ்அசோசியேஷன்ஆஃப்இந்தியா, தேசியசினிமாதினத்தைகொண்டாடும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "வருகிற 16-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ளமல்டிபிளக்ஸ்திரையரங்குகளில் 4000 திரைகளுக்குடிக்கெட்கட்டணமாக ரூ.75 மட்டுமே வசூலிக்கப்படும்"எனக்குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த முன்னெடுப்பில்பிவிஆர்,ஐநாக்ஸ்,சினிபோலிஸ்உள்ளிட்ட பல பிரபல திரையரங்குகள் பங்கேற்கின்றனர்.