National award returned with an apology letter!

காக்கா முட்டை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் மணிகண்டன். இந்த படங்களுக்காக தேசிய விருது பெற்றவர். சினிமா சம்பந்தப்பட்ட வேலைக்காக மட்டும் சென்னைக்கு வருகிறவர் சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள எழில்நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கடந்த 8-ந் தேதி வியாழக்கிழமை இரவு அன்று மர்மநபர்கள் பூட்டை உடைத்து திருடியிருக்கிறார்கள்.

Advertisment

இயக்குநர் மணிகண்டன் வேலை விசயமாக சென்னையில் இருந்த சமயத்தில், அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த திருட்டு நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்டமாக 1 லட்ச ரூபாய் ரொக்கத்தொகையும், 5 சவரன் நகையும் காணாமல் போயிருக்கிறது என்பது விசாரணையில் தெரிய வந்தது. அதில் தேசிய விருதாக வழங்கிய பதக்கமும் அடங்கும்.

Advertisment

இந்நிலையில், மணிகண்டனின் வீட்டு வாசலில் ஒரு பாலிதீன் பை கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதை பரிசோதிக்கையில் தேசிய விருதுக்கான பதக்கங்களை திரும்ப வைத்துச் சென்றுள்ளனர். அத்தோடு ஒரு கடிதத்தையும் வைத்துள்ளனர். அதில் “அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு” என்று எழுதியிருக்கிறார்கள். பதக்கத்தையும் கடிதத்தையும் கைப்பற்றி காவல்துறையினர் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.