Skip to main content

"அத்தனை மொழிகளிலும் மறக்க முடியாத எத்தனை நூறு படங்கள்" - சௌகார் ஜானகி குறித்து நாசர் நெகிழ்ச்சி!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

Nasser praised Chaukar Janaki

 

பழம்பெரும் நடிகையான  சௌகார்  ஜானகி தமிழ்  மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட தென்னிந்திய  மொழி படங்களில் நடித்து பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.  50 வருடங்களுக்கு மேல் திரை துறையில் நடித்து வரும்  சௌகார்  ஜானகி தற்போது கூட சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது கலைச்சேவையை பாராட்டி மத்திய அரசு  சமீபத்தில் பத்ம ஸ்ரீ விருதை வழங்கியது. அதற்கு திரை பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

இந்நிலையில் சௌகார் ஜானகிக்கு பத்ம ஸ்ரீ விருது கிடைத்ததற்கு தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் சார்பாக வாழ்த்து தெரிவித்து நாசர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஓ எங்கள் ‘சவுக்கார்’ அம்மா.. அத்தனை மொழிகளிலும் மறக்க முடியாத எத்தனை நூறு படங்கள்! ஒவ்வொன்றும் முத்தாய்! ஒன்றில் கண்டது..  இன்னொன்றில் இல்லை. புதிது புதிதாய் கண்டு ரசிக்க கண்கோடி! ‘புதிய பறவையில்’ மிரட்டியதும் மிரண்டு போனதும் ஒரே ஜோடிக்கண்களா? ஆச்சர்யம்! கண்களை மிஞ்சும் உங்கள் முத்துசிரிப்பு! அச்சிரிப்பினும் வழிந்தோடும் உண்மையான உங்கள் அன்பும் பாசமும்!! தாங்கள் எங்களுக்கு தந்த கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் முத்தாய் கோர்த்து அழகு பார்த்து மனமகிழ்ந்து விம்மிய எங்களுக்கு அம் முத்துமாலைக்கு பதக்கமாய் இன்று “பத்மஶ்ரீ” உங்களுக்கு கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமை. தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கொடை நீங்கள், என்றென்றும் நீடுடி வாழ நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். “பத்மஶ்ரீ” விருது அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்