Skip to main content

”விஜய் ரசிகர்களுக்கு 'கைதி' படம் மேல சாஃப்ட் கார்னர் இருக்கும்” - நரேன் #Exclusive

Published on 19/10/2019 | Edited on 21/10/2019

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'கைதி' படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நடிகர் நரேன் இப்படம் குறித்து நமக்கு அளித்த பிரித்தியேக பேட்டியில் பேசியபோது...

 

narain

 

''என் வாழ்க்கையில் எல்லா விஷயங்களுமே லேட்டாக தான் அமையும். எனக்கு அமையும் படங்களும் அப்படித்தான். நானாக இதை செய்ய மாட்டேன், அதை செய்யமாட்டேன் என்றெல்லாம் சொல்வதில்லை. வருகிற வாய்ப்புகளில் நான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அதேபோல் வாய்ப்புகளும் லேட்டாகத்தான் வருகிறது. எனக்கு லேட்டாக படவாய்ப்பு கிடைப்பதை நினைத்து நான் வருத்தப்படுவதில்லை. இந்த படம் மட்டுமல்ல, எந்த படமாக இருந்தாலும், எப்போது வெளியானாலும், எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அந்த படம் நன்றாக ஓடவேண்டும். அதுதான் முக்கியம். நான் இதை மட்டுமே எனக்கு ப்ரஷாராக நினைத்துக்கொள்வேன். அதை நோக்கி மட்டுமே என் பயணம் இருக்கும்.

 

 

'கைதி' பட வாய்ப்பு கார்த்தி மூலம் வந்தது. கதையும், என் கதாபாத்திரமும் நன்றாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். என் கதாபாத்திரம் படம் ஆரம்பிப்பதற்கு முன்பே முழுவதுமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனால் நான் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதைமட்டும் செய்தாலே படத்திற்கு போதுமானதாக இருந்தது. படம் முழுவதும் இரவிலேயே நடப்பது மட்டுமே சற்று சவாலாக இருந்தது. இது நல்ல கண்டன்ட் உள்ள படம் என்பதால் விஜய் ரசிகர்களுக்கும் இந்த படம் மேல் கண்டிப்பாக சாஃப்ட் கார்னர் ஏற்படும். அவர்களும் இப்படத்தை விரும்பி பார்ப்பார்கள். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.சி.யூ; லோகேஷின் புது ப்ளான் - ரகசியம் உடைத்த நரேன்

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
narain shared about lokesh new plan about lcu

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தொடர்ந்து ரஜினியின் 171வது படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். அதற்கான கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரலில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இதனிடையே‘ஜி-ஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். உறியடி விஜய்குமார் நடித்த ‘ஃபைட் கிளப்’ படத்தை தன்னுடைய நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார். இப்படம் வருகிற 15ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அதன் ப்ரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 

லோகேஷ் கனகராஜ், தனது படங்களில் கைதி படத்தின் கதையை விக்ரம் படத்துடன் தொடர்புப்படுத்தி இயக்கியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் அதற்கு லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என ரசிகர்கள் அழைத்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக கடைசியாக அவர் இயக்கிய லியோ படத்திலும் கத்தி படத்தில் வந்த போலீஸ் கதாபாத்திரத்தை தொடர்பு படுத்தியிருந்தார். 

இதையடுத்து ரஜினியை வைத்து அவர் இயக்கும் படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் பாணியில் வராது என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இப்படத்தை முடித்துவிட்டு கைதி இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்த நிலையில் அதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கைதி 2 தொடங்குவதற்கு முன்பாக ஒரு குறும்படம் இயக்க திட்டமிட்டுள்ளதாக நரேன் தெரிவித்துள்ளார். 

மலையாளத்தில் நரேன், மீரா ஜாஸ்மீன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் குயின் எலிசபத். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனால் ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர் ஒரு நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் 10 நிமிட குறும்படம் இயக்கவுள்ளதாகவும் அவரோடு இணைந்து தானும் பணியாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அது தான் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்கான ஆரம்ப கதையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

கைதியைக் கொன்ற அஜய் தேவ்கன் - வருத்தத்தில் ரசிகர்கள்

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

ajay devgan bhola teaser trolled by kaithi movie fans

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் 'கைதி'. ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை, சஸ்பென்ஸ் கலந்து த்ரில்லிங்குடன் சொல்லியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீசானது.

 

இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை நடிகர் அஜய் தேவ்கன் வாங்கியிருந்தார். 'போலா' என்ற தலைப்பில் இப்படத்தில் நடித்து அதனை இயக்கியும் உள்ளார். பொதுவாக, இந்தி ரீமேக்கில் அவர்களுக்கு ஏற்றாற்போல் கதையில் மாற்றம் செய்து உருவாக்குவார்கள். அந்த மாற்றம் பல படங்களுக்கு ஒர்க்அவுட் ஆவதில்லை என்பது தான் பலரின் வருத்தம். இதற்கு உதாரணமாக 'போக்கிரி', 'காஞ்சனா', 'ராட்சசன்' என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் இப்போது புதிதாக இணைந்துள்ளது கைதி படத்தின் இந்தி ரீமேக்கான 'போலா'. 

 

'போலா' படம் அடுத்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் தான் தற்போது இணையவாசிகளின் ட்ரோல் மெட்டீரியல். 'கைதி' படத்தைப் பார்த்து ஃபயர் விட்ட ரசிகர்கள் எல்லாம் 'போலா' பட டீசரை பார்த்து, 'என்னடா பண்ணி வச்சிருக்கீங்க...', 'படத்தை கொலை செய்து விட்டார் அஜய் தேவ்கன்' என கமெண்ட்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர். மேலும், கைதி பட ரசிகர்கள் 'இது கைதி படம் தானா...இல்ல வேறொரு படமா' என வருத்தத்தில் உள்ளனர்.