Published on 26/04/2021 | Edited on 26/04/2021
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியது. அரசு விதித்த ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கரோனா பரவல் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதிலும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், நடிகை நந்திதா சுவேதாவிற்கு கரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு கரோனா அறிகுறிகள் உள்ளன. என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். கவனமாக இருந்து உங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.