Skip to main content

படப்பிடிப்பில் விபத்து! ரத்தக்காயத்தை பொருட்படுத்தாமல் நடித்த நடிகை!

Published on 26/10/2019 | Edited on 26/10/2019

நந்திதா ஸ்வேதா நடிப்பில் 'ஐபிசி 376' என்ற ஆக்‌ஷன், ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. இதில் அவர் ஆக்சன் போலீசாக நடித்து வருகிறார்.  ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா.

 

nandita

 

xcZX

 

மேலும் சண்டைக்காட்சிகளில் நந்திதா ஸ்வேதாவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரத்தை எடுத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.  ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் உருவாகும் இப்படம் இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள 'ஐபிசி 376' என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. பவர்கிங் ஸ்டுடியோ சார்பாக எஸ்.பிரபாகர் தயாரித்து வரும் இப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏற்காடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக  நடைபெற்று வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"உடலை அசைக்கக் கூட முடியாது" - அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நந்திதா

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

nandita swetha affected by rare disease

 

'அட்டகத்தி' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான நந்திதா ஸ்வேதா, தொடர்ந்து ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, முண்டாசுப்பட்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சசிகுமார் நடிப்பில் வெளியான, 'எம்ஜிஆர் மகன்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். கன்னடத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நந்திதா தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள 'ஹிடிம்பா' என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். 

 

அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில், தனது சொந்த வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார். அதில், அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "20 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களின் மக்கள் தொகையில் சுமார் 2 சதவீதத்தை பாதிக்கும் பைப்ரோமியால்ஜியா என்ற தசை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு சிறிய வேலை செய்தால் கூட அது என் தசைகளில் பிரச்சனை ஏற்படுத்தும். இது சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாட்டை உருவாக்கும். உடலை அசைப்பதற்குக் கூட கடினமாக இருக்கும். இதையெல்லாம் தாண்டி தான் ஹிடிம்பா படத்திற்காக உடல் எடையைக் குறைத்துள்ளேன்" என்றார். 
 

 

 

Next Story

நடிகை நந்திதா சுவேதாவிற்கு கரோனா அறிகுறி! 

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

Nandita Swetha

 

கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியது. அரசு விதித்த ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கரோனா பரவல் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதிலும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்த நிலையில், நடிகை நந்திதா சுவேதாவிற்கு கரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு கரோனா அறிகுறிகள் உள்ளன. என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். கவனமாக இருந்து உங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.