எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நமீதா. இதனை அடுத்து ஏய், பில்லா, அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். பின்னர், அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தற்போது டிவி நிகழ்ச்சிகளில் கெஸ்ட்டாகவும் ஜட்ஜ்ஜாகவும் வருகிறார்.

namitha

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் நடிகை நமீதாவை சமூக வலைத்தளத்தில் ஒருவர் அநாகரீகமாக தொடர்புகொண்டுள்ளார். அதை வன்மையாகக் கண்டித்தும் அப்படி அந்தச் செயலை செய்தநபரின் புகைப்படத்தைப் பதிவிட்டு நடிகை நமீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், “என்னுடைய அமைதியை வீக்னஸ் என்று தவறாக எடுத்துகொள்ளாதீர்கள். உண்மையான ஆணுக்குப் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது தெரியும். எந்த மாதிரியான வாழ்க்கை பாதையை கொண்ட பெண்ணாக இருந்தாலும் அவருடைய சொந்த தாயை அவமதிப்பது போன்றே உணர்வார்கள் அவர்கள். கடவுள் துர்கை அம்மனுக்காக ஒன்பது நாட்கள் துர்கா பூஜை நடத்துவதிலும், பெண்கள் தினத்தன்று வாழ்த்து தெரிவிப்பதற்கு பதிலாக பொது வாழ்வில் அவர்களை மதியுங்கள். அதுதான் முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.

நமீதாவின் இந்தப் பதிவை தொடர்ந்து அவருக்கு ரசிகர்களும், இணையவாசிகளும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.