Skip to main content

கிணற்றில் விழுந்த நமீதா... படக்குழு கொடுத்த விளக்கம்!

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

namitha

 

ஆர்.எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பெளவ் வெளவ்'. இப்படத்தை நடிகை நமீதா தயாரிக்கிறார். மேலும், இப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், நடிகை நமீதா கிணற்றுக்குள் தவறி விழும் வகையிலான காட்சிகள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பைத் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்த அந்தப் பகுதி மக்கள், நடிகை நமீதா கிணற்றுக்குள் தவறி விழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து, படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் அதிகளவு திரண்டனர். 'இது படம் தொடர்பான காட்சி' எனப் படக்குழுவினர் விளக்கம் கொடுத்த பின்னரே மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ஓர் முக்கியமான செய்தி சொல்றேன்... அது நமது கலாச்சாரமே கிடையாது" - நமீதா

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

namita wishes for tamil new year celebration

 

சித்திரை முதல் நாள், ஆங்கில ஆண்டில் வருகிற 14 ஆம் நாள் (14.04.2023) தமிழ்ப் புத்தாண்டாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கடந்த 2008 ஆம் ஆண்டு தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என அப்போது ஆட்சியில் இருந்த கலைஞர் தலைமையிலான  திமுக அரசு அரசாணை பிறப்பித்தது. பின்பு 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுக அரசு, திமுக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து ஏப்ரல் 14 ஆம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்திருந்தது.

 

அதன்படியே மக்களும் கொண்டாடி வந்தனர். பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது. அதில் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் என்று குறிப்பிடபட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் ஏப்ரல் 14ஆம் தேதியே தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். 

 

தமிழ்ப் புத்தாண்டிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மக்கள் புத்தாண்டை வரவேற்கத் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான நமீதா, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "உங்களுக்கு ஓர் முக்கியமான செய்தியை சொல்ல போகிறேன். அனைவரும் டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டை கொண்டாடி வருகிறோம். மேலும் நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் பிரம்மாண்டமாக வரவேற்கிறோம். ஆனால் அது நமது கலாச்சாரம் கிடையாது. அது நம்முடைய பாரம்பரியம் கிடையாது. 

 

நாம் எல்லாம் பெருமை மிகு இந்தியர்கள். வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வருகிறது. அதனை உங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். காலையில் எழுந்து குளிச்சிட்டு கோவில் போய்ட்டு வாருங்கள். உங்கள் பெற்றோரிடம் ஆசி பெறுங்கள். அதுதான் நம்முடைய கலாச்சாரம். அதுதான் நமது பாரம்பரியம். டிசம்பர் 31 நம்முடைய புத்தாண்டு கிடையாது. ஏப்ரல் 14 ஆம் தேதி தான் நமது புத்தாண்டு" என பேசியுள்ளார்.  

 

மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "பெருமை மிக்க பாரத நாட்டில் வாழ்கின்ற மிகத் தொன்மையான தமிழர்களாகிய நமது ஒரே புத்தாண்டு என்பது வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வருகின்ற சித்திரை 1 ஆம் தேதி மட்டுமே... நிச்சயமாக, ஜனவரி 1 கிடையாது. ஆங்கிலப் புத்தாண்டு என்பது நமது கலாச்சாரமே கிடையாது. அனைவருக்கும் எனது சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

 

 

 

Next Story

பொங்கல் விழா கொண்டாடிய நமீதா (படங்கள்) 

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ‘நம்ம ஊரு பொங்கல்’ நிகழ்ச்சி ஓட்டேரி பகுதியில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகை நமீதா கலந்துகொண்டு பொங்கல் வைத்தார். அதனைத் தொடர்ந்து  கோலப் போட்டி, மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பாஜகவினர் பலரும் கலந்து கொண்டனர்.