Skip to main content

நண்பரால் கொடூரமாக தாக்கப்பட்ட பிரபல நடிகை... அழுதடித்து காவல் நிலையத்திற்கு ஓட்டம்...

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

ஹிந்தி சின்னத்திரையில் நாம்கரன் என்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் நளினி நெகி. அண்மையில் தன்னுடன் வசித்து வந்த ப்ரீத்தி என்ற நபர் தன்னை தாக்கிவிட்டதாக போலீஸில் நளினி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

nalini negi


நளினியின் நண்பர் ப்ரீத்தி, கண்ணாடி தம்ளரால் முகத்தில் அடித்து காயப்படுத்தி உள்ளார். இதன் பின் அழுது அடித்துகொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்துள்ளார். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் குறித்து நளினி நேகி ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பது.
 

“நானும் பிரீத்தி என்ற பெண்ணும் சில வருடங்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே வீட்டில் தங்கி இருந்தோம். சில நாட்களுக்கு பிறகு அங்கிருந்து வெளியேறி தனியாக வீடு பார்த்து தங்கினேன். பிரீத்தி சமீபத்தில் வீடு வாடகைக்கு பார்க்கிறேன். அதுவரை உன்னுடன் தங்கிக்கொள்கிறேன் என்றார். நான் தங்கி இருந்த வீடு 2 படுக்கை அறை கொண்டது என்பதால் சம்மதித்தேன்.
 

அட்

சில நாட்கள் கழித்து பிரீத்தியின் அம்மாவும் அதே வீட்டில் வந்து தங்கினார். இதனால் ஊரில் இருந்து எனது பெற்றோர்கள் வருகிறார்கள். எனவே வேறு வீட்டுக்கு செல்லுங்கள் என்றேன். திடீரென்று பிரீத்தியும், அவரது அம்மாவும் என்னை மோசமான வார்த்தைகளால் திட்டி சண்டைக்கு வந்தனர்.
 

பிரீத்தி அம்மா கண்ணாடி தம்ளரால் என் முகத்தில் அடித்தார். இருவரும் என்னை குரூரமாக தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவசேனாவில் இணைந்த பாலிவுட் நடிகர்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Bollywood actor joined Shiv Sena

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் மூத்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இன்று (28.03.2024) தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் சிவசேனாவில் இணைந்தது குறித்து பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறுகையில், “நான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசியலில் இருந்தேன். அதாவது 14வது மக்களவை காலம் ஆகும். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.  சிவசேனாவில் இணைந்த நடிகர் கோவிந்த மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.