‘மலரோடு மலர்கள் கூட ஊர் என்ன தூற்றுமோ...’ - நிச்சயதார்த்த க்ளிக்ஸ்

naga chaitanya Sobhita Dhulipala engagement

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. தமிழில் வின்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். பின்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கஸ்டடி படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டது. இதையடுத்து தண்டல் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக நடித்த அவர், அப்படத்தில் ஹூரோயினாக நடித்த சமந்தாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அதன் பிறகு 2021ஆம் ஆண்டு சில கருத்து வேற்பாடு காரனமாக சமந்தாவை பிரிந்தார். இதையடுத்து சமீப காலமாக பாலிவுட் நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. நடிகை ஷோபிதா துலிபாலா பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழி ரசிகர்களிடம் அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

naga chaitanya Sobhita Dhulipala engagement

இந்த நிலையில் நாக சைதன்யாவுக்கும் ஷோபிலா துலிபாலாவுக்கும் இன்று ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாக அர்ஜூனா, இத்திருமண நிச்சயதார்த்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நிச்சயதார்த்த புகைப்படங்களைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அவர், “எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும், ஷோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை 9:42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஷோபிதா துலிபாலாவை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Actress engagement
இதையும் படியுங்கள்
Subscribe