Skip to main content

விஜய் சேதுபதி அமீர்கான் படத்திலிருந்து விலகியதற்கு என்ன காரணம்?

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

naga chaitanya said Why Vijay Sethupathi walks out Aamir Khan laal singh chaddha

 

'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தை தொடர்ந்து அமீர் கான் 'லால் சிங் சத்தா' என்னும் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது 1994ஆம் ஆண்டு  ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும். இந்தப் படத்தில் குறைந்த அளவிலான ஐக்யூ உள்ளவர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

ad

 

லால் சிங் படத்தில் அமீர் கானுடன் நடிக்க முதலில் நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அதன் பிறகு அந்த படத்தில் நடிப்பதில் இருந்து விஜய் சேதுபதி விளக்கினார். விஜய் சேதுபதியின் விலகளுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் என்னவென்று தெரியாமலேயே இருந்தது. 

 

இந்நிலையில் லால் சிங் சத்தா படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கான காரணத்தை அப்படத்தில் நடித்த நாகசைதன்யா வெளியிட்டுள்ளார். லால் சிங் சத்தா படம் தொடர்பான அவர் அளித்த பேட்டியில், "இப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் விஜய் சேதுபதிதான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அவர் நடிக்க வேண்டிய படம் நிறைய இருந்ததால் கால்ஷீட் பிரச்னை காரணமாக இப்படத்தில் இருந்து விலகினார். இதனை விஜய் சேதுபதி நேரடியாக சென்று படக்குழுவினரிடமே கூறி, அதன் பிறகு விலகி சென்றார். அதன் பிறகு தான் நான் இந்த படத்திற்குள் வந்தேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” - விஜய் சேதுபதி வெளியிட்ட டீசர் வைரல்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Soodhu Kavvum 2 First Look and Teaser released

திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூது கவ்வும்’. இதில் விஜய் சேதுபதி, அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட், தங்கம் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயரித்துள்ளனர். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க எம்.எஸ். அர்ஜுன் இயக்கியுள்ளார். கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. 

Soodhu Kavvum 2 First Look and Teaser released

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், அஷோக் செல்வன், உள்ளிட்ட சில பிரபலங்கள் அவர்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்கள். இப்படத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரனை தவிர்த்து ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.

டீசரில் முதல் பாகத்தை போலவே கடத்தல், காமெடி, ஆக்‌ஷன் போன்ற அம்சங்கள் இதிலும் தொடர்கிறது. குறிப்பாக மிர்ச்சி சிவா பேசும், “பொண்ணுங்களோட கற்பனையில தான் நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” என்ற வசனம் தற்போது பலரது கவனத்தை பெற்றுள்ளது. படத்தின் இசை மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Next Story

சாம் ஹாப்பி அண்ணாச்சி; மகிழ்ச்சியில் திளைக்கும் பிரித்விராஜன்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
 prithviactor tweet - blue star

'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்  'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. இந்த வெற்றியைப் படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது.

இப்படத்தில் நடித்த இயக்குநர், நடிகர் பாண்டியராஜனின் மகனும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனுமான பிரித்விராஜனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது அவர் நம்மிடையே பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.  இந்நிலையில் தன்னுடைய படத்தை நடிகர் விஜய் சேதுபதி பார்த்து, பாரட்டியதை நெகிழ்ச்சியோடு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது “இந்த தம்பிக்காக நேரம் ஒதுக்கி என்னுடன் சேர்ந்து “ப்ளூ ஸ்டார்” பார்த்ததற்கு நன்றி அண்ணா. படம் உங்களுக்கு பிடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் வீடு வந்து என்னையும், எங்களுடைய படக்குழுவையும் பாராட்டியதற்கு நன்றி. “சாம் ஹாப்பி அண்ணாச்சி!!” என்றிருக்கிறார். இதில் சாம் என்பது ப்ளூஸ்டார் படத்தில் வரும் கதாபாத்திரம்; அத்தோடு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்பது விஜய்சேதுபதி பேசி பின்னர் பிரபலமான வசனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.