Skip to main content

"திரை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு" - விவாகரத்து குறித்து சமந்தா கணவர் விளக்கம்!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

bvfsbdfnd

 

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்து மத வழக்கத்தின்படியும் கிறிஸ்தவ மத வழக்கத்தின்படியும் இவர்களது திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் தொடர்ந்து சினிமாவில் நடித்துவரும் நடிகை சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற தகவல் வெகுநாட்களாகவே உலா வந்தவண்ணம் இருக்கிறது. சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து நடிகை சமந்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு மௌனம் மட்டுமே காத்தார். இந்நிலையில், தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகர் நாக சைதன்யா விளக்கம் அளித்துள்ளார். அதில்...

 

“நான் சிறுவயதில் இருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதைப் பார்த்து வளர்த்தவன். இந்தப் பழக்கம் என்னுடைய தாய், தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் இருவரும் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் அதை கடைப்பிடித்து வருகிறேன். சமந்தாவுடன் விவாகரத்து என்ற செய்தி பரவிவருவது, எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்துவிடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்படும். முந்தைய நாள் செய்திகள் மறந்துவிடுகின்றன. இந்தப் புரிதல் எனக்குள் வந்தவுடன் நானும் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன்” என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாக சைதன்யாவுடன் ஜோடி போடும் சாய் பல்லவி

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

sai pallavi to pair with naga chaitanya in new movie

 

நாக சைதன்யாவின் 23வது படத்தை, சந்து மொண்டேடி இயக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் வழங்குகிறார். இப்படத்தை பன்னி வாசு தயாரிக்கிறார். தற்போது, ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகும் நிலையில், கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கதாநாயகியாக சாய் பல்லவி இணைந்துள்ளார். மேலும், படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை விரைவில் தயாரிப்பு குழு அறிவிக்கவுள்ளனர். 

 

 

Next Story

சமந்தாவை பார்த்து வெளியேறினேனா?- நாக சைதன்யா விளக்கம்

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

naga chaitanya samantha issue

 

கன்னடத்தில் நிதின் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் பிரஜ்வல், மஞ்சுநாத் நாயக்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'ஹாஸ்டல் ஹுடுகாரு பேககிடாரே' (Hostel Hudugaru Bekagiddare). இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு 'பாய்ஸ் ஹாஸ்டல்' என்ற தலைப்பில் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியானது. 

 

இப்படத்தின் தெலுங்கு பதிப்பு, ஹைதராபாத்தில் சிறப்பு திரையிடல் நடந்ததாகவும் அதில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. முதல் பாதி முடிந்ததும், இடைவெளியில் சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவரவுள்ள குஷி படத்தின் ட்ரைலர் ஒளிபரப்பப்பட்டதாகவும் அதனால் நாக சைதன்யா திரையரங்கை விட்டு படம் பார்க்காமல் பாதியிலே வெளியேறிவிட்டதாகவும் தகவல் வெளியானது. 

 

இந்நிலையில் இந்த தகவல் குறித்து பிரபல ஆங்கில ஊடகத்திற்கு விளக்கமளித்துள்ளார் நாக சைதன்யா. அவர் கூறுகையில், "இது முற்றிலும் போலியானது. சில தெலுங்கு இணையதளங்கள் இந்த வதந்தியை ஆரம்பித்து விட்டன. அதை சரி செய்யும்படி ஏற்கனவே அவர்களிடம் சொல்லிவிட்டேன்" என்றுள்ளார். 

 

நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், பின்பு 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்தனர். அதன்படி இருவரும் தற்போது பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர் என்பது நினைவுகூரத்தக்கது.