Skip to main content

"ஆசியாவில் ஒரு முக்கிய கட்டடமாக இருக்கும்" - கார்த்தி

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

nadikar sangam building about karthi

 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 2022-2023ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கு, எதிர்கால பொருளாதாரத் திட்டமிடல், எதிர்கால நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்கப்பட்டது. மேலும் புதிய கட்டிடம் கட்ட ரூ.40 கோடி கடன் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

பின்பு செய்தியாளர்களை நிர்வாகிகள் கூட்டாகச் சந்தித்தனர். அப்போது பேசிய விஷால், "இரண்டாவது முறையாக எங்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் எங்க மேல் உள்ள நம்பிக்கை தான். அந்த நம்பிக்கை வீண் போகாமல் கடைசி கோரிக்கையாக நாங்க வச்சது, அந்த கட்டடம் மட்டும் தான். மற்ற எல்லாத்தையும் நாங்க நிறைவேத்திட்டோம். விரைவில் அந்தக் கடைசி கோரிக்கையும் நிறைவேத்துவோம். அடுத்த கூட்டம் நடிகர் சங்க கட்டடத்தில் தான் நடக்கும். நடிகர் சங்கத்துக்கான இடத்தை மீட்டதே ஒரு பெரிய விஷயமாக கருதுகிறோம். அதேநேரம், தேர்தல் நடத்துவதற்கு முன்னால், இன்னும் ஒரு 5 மாத காலம் கொடுத்திருந்தால், நாங்கள் கட்டடத்தை கட்டி முடித்திருப்போம். நிறைய தடங்கல் வருகிறது. இம்முறை கட்டடம் நிச்சயம் கட்டப்படும்" என்றார். 

 

பின்பு பேசிய கார்த்தி, "ஆசியாவில் ஒரு முக்கிய கட்டடமாக நடிகர் சங்க கட்டடம் இருக்கும். நிதி இருந்தால் மட்டுமே அதை உரிய காலத்திற்குள் கட்டிமுடிக்க முடியும். அதற்கான எல்லா வேலைகளையும் செஞ்சிகிட்டு இருக்கோம். கூடிய சீக்கிரம் வங்கியில் இருந்து நிதி வந்தவுடன் வேலைகளை ஆரம்பிப்போம். கொரோனாவிற்கு பிறகு எல்லா விலைகளும் 30 சதவீதம் அதிகமாகியிருக்கு. ரூ.40 கோடி வாங்க தகுதி இருக்கு. கடனுக்கான ஒப்புதலை வாங்கியிருக்கோம்" என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்கு நெப்போலியன் நிதியுதவி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Napoleon gave a deposit of ₹1 crore for nadigar sangam new building

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்கப் பொருளாளர் கார்த்தி 67ஆவது சங்க பொதுக்குழு கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாகவும் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் கொடுத்துள்ளதாகவும் நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இதனிடையே கடந்த 22 ஆம் தேதி சங்கத்தின் புதிய கட்டடப் பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க புதிய கட்டடப் பணிகளைத் தொடர்வதற்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 - 2006 ஆம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன், சங்க கட்டிட வளர்ச்சிக்காக ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி மட்டும்) வைப்புநிதியாய் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகி வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்” - விஷால் பகிரங்க குற்றச்சாட்டு 

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vishal allegation about theatre owners for not allocating theatres for rathnam movie

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வந்தனர். மேலும் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திருச்சி, தஞ்சாவூர் பகுதி திரையரங்குகளில் ரத்னம் படம் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விஷால் குற்றச்சாட்டு குறித்து பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், “சங்கத்தின் தலைவர் மீனாட்சி மற்றும் செயலாளர் சிதம்பரம் என்னுடைய ஃபோனை எடுக்க மறுக்கிறார்கள். என் நண்பர் சீனு சார், ரத்னம் படத்தை வடக்கு மற்றும் தெற்கு பதிகளில் வாங்கியிருக்கிறார். ஒரு திரைப்படம் வெளியாவதே பெரிய விஷயம். இந்த காலகட்டத்தில் இப்படி நீங்க பண்ணும் போது இதற்கு பெயர் கட்டப்பஞ்சாயத்து.   

இதில் முதலமைச்சர் திருச்சி கலெக்டர், எஸ்.பி, காவல் துறையினர் என அனைவருக்கும் நான் சொல்ல விருப்பப்படுவது, அவர்கள் செய்வது கட்டப்பஞ்சாயத்தை தவிர்த்து வேற எதுவும் கிடையாது. விஷாலுக்கே இந்த கதி என்றால் நாளைக்கு ஒரு புதுமுக நடிகருக்கு என்ன நடக்கும். நீங்க ஃபோன் எடுக்காமல் இருப்பது, தியேட்டர் ஒதுக்கப்படாமல் இருப்பது, அது உங்களுடைய அலட்சியம். ஆனால் அந்த அலட்சியத்தைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்” என கூறுகிறார்.