‘மாறன்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள தனுஷ், அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘நானே வருவேன்’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் தொடர்பான அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னரே வெளியிட்ட படக்குழு, படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவந்தது.
இதற்கிடையே, இயக்குநர் செல்வராகவன் ‘பீஸ்ட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. ‘நானே வருவேன்’ படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவந்த நிலையில், இப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு நாளை (16.10.2021) வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக, ‘நானே வருவேன்’ படத்தின் பெயரை மாற்றம் செய்யும் யோசனையில் படக்குழு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் படத்தின் பெயர் ‘நானே வருவேன்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.