Skip to main content

"நாடு போற்றும் தமிழறிஞர்" - நெல்லை கண்ணன் மறைவுக்கு மிஷ்கின் இரங்கல்

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

mysskin condolence to nellai kannan

 

 

பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன்(77) 1970களில் தொடங்கி தமிழக அரசியல் சூழலில் முக்கிய ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக காமராஜர் குறித்து நெல்லை தமிழில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மிகவும் பிரபலம். நெல்லைக்கண்ணனின் முதல் மகன் சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார். இரண்டாம் மகன் ஆறுமுகம் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார். நெல்லை கண்ணன் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதைப் பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் உடல்நலக்குறைவால் நெல்லை கண்ணன் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முதல்வர் ஸ்டாலின் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "நாடு போற்றும் தமிழறிஞரும், எனது பிரியத்திற்குரிய நண்பர் சுகாவின் தந்தையாருமான அய்யா நெல்லை கண்ணன் மறைவு துயரம் தருகிறது. அவரது குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் நேயர்கள் அனைவருக்கும் எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் சேதுபதியுடன் மோத ஜெயராமை தேர்வு செய்த மிஷ்கின்?

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

jayaram to play villain in vijay sethupathi, mysskin movie

 

விஜய் சேதுபதி தற்போது தமிழில் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை பாகம் 2', மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், ஆறுமுக குமார் இயக்கத்தில் புது படம் என ஏராளமான படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படம் கமிட்டாகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், அதன் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது.  

 

இப்படத்தை எஸ். தாணு தயாரிப்பதாகத் திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் இப்படத்தின் வில்லனை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயராம் தற்போது விஜய் சேதுபதியுடன் இப்படத்தில் மோதவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 

 

ஏற்கனவே ஆண்ட்ரியா நடிப்பில் மிஸ்கின் இயக்கியுள்ள 'பிசாசு 2' படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

மிஷ்கினின் பேச்சால் விஜய் ரசிகர்கள் கோபம்

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

Vijay fans are angry with Mysskin speech about leo update

 

இயக்குநர் மற்றும் நடிகருமான மிஷ்கின் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது மேடையில் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வகையில் சமீபத்தில் டைனோசர்ஸ் பட இசை வெளியீட்டு விழாவில், "10 மணி ஆச்சு... எல்லாரும் போய் தண்ணி அடிங்க., சிகரெட் அடிங்க, தூங்குங்க" என மேடையில் பேசியது பலருக்கும் முக சுளிப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் விஜய் குறித்து பேசியது தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அவர் பேசுகையில், "லியோ பட இசை வெளியீட்டு விழா வரும் 30ஆம் தேதி நடக்குது. படம் ரொம்ப நல்லா வந்திருக்குனு கேள்வி பட்டேன். விஜய் தம்பியும் பார்த்திருக்கான். ரொம்ப பிடிச்சிருக்காம். நிச்சயம் படம் வெற்றியடையும்" என்றார். 

 

இதில் விஜய்யை அவன் இவன் என்று சொல்லியது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. மிஷ்கினை கிண்டல் செய்தும் பொது இடத்தில் மரியாதையாக பேச வேண்டியும், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் சிறிய வில்லனாக மிஷ்கின் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது.