Skip to main content

“பாசமாக வளர்த்த பெண்ணை கொலை செய்கிறார்கள் அதுதான் சைக்கோபாத்”- இயக்குனர் மிஷ்கின் சிறப்பு பேட்டி!

Published on 24/01/2020 | Edited on 25/01/2020

துப்பறிவாளன் படத்திற்கு பின் இரண்டு வருடங்கள் கழித்து மிஷ்கின் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகும் படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ் ஹைதாரி, நித்யா மேனன், இயக்குனர் ராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். முதலில் இந்த படத்திற்கு பி.சி.ராம் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார் பின்னர் அவர் விலகிக்கொள்ள அவருடைய உதவி ஒளிப்பதிவாளர் தன்வீர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். 
 

myskin

 

 

இந்நிலையில் இந்த படம் தொடர்பாக இயக்குனர் மிஷ்கின் நமக்கு அளித்த பேட்டியின்போது சைக்கோ படம் குறித்தும், அவரது தனிப்பட்ட சமூக பார்வை குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவருடைய கண்ணோட்டத்தில் சைக்கோ என்பவர்கள் எந்த மாதிரியானவர்கள் என கேள்விகேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த மிஷ்கின், “நாம் சைக்கோ என்று யாரையெல்லாம் சொல்கிறோம் என்று பார்த்தால் அதீத உணர்வை வெளிப்படுத்துபவர்களை சைக்கோ என சொல்கிறார்கள். என்னையவே சைக்கோ என்று சொல்கிறார்கள். ஒரு பெண்ணை ஒருவர் ஆழமாக காதலித்தால் ‘என்னடா சைக்கோத்தனமா இருக்க’ என்கிறோம். அதன் அர்த்தம் சைக்கோவே கிடையாது. அது ‘மன பிறழ்வு’, சைக்கோ பாத்தாலஜிக்கலி அஃபக்டட். இப்போது ஒரு பெண்ணை ஆழமாக காதலித்தோம் என்றால் சைக்கோ என்று அவரை அழைக்கும் வார்த்தை மிகவும் தவறானது. அந்த மன பிறழ்வு எப்படி ஏற்படுகின்றது என்றால்  14 வயது முதல் 18 வயது வரை ஒரு மனிதனின் முன் மூளையில் எதாவது அடிப்பட்டால் இவ்வாறு ஏற்படும். அந்த பகுதியில்தான் பல எமோஷன்கள் இருக்கிறது. நாம் பரிதாப்படும் எமோஷனும் அந்த பகுதியில்தான் இருக்கிறது. அதனால் அங்கு அடிப்பட்டவுடன் பரிதாப உணர்வு போய்விடுகிறது. உங்கள் கையில் இரத்தம் வருவதை பார்த்தால் நான் பதறிவிடுவேன். ஆனால், மனபிறழ்வு ஏற்பட்டவராக இருந்தால் அதை அப்படியே பார்த்துக்கொண்டே இருப்பார். ஏனென்றால் உங்களுக்கு அவருடைய வலி தெரியாது. இது உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்படி நடக்கும். சில மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் அம்மா, அப்பா இல்லாமல் இதுபோல சிறு வயதில் சில கசப்பான விஷயங்கள் அவர்களுக்கு நேர்ந்திருக்கும். இப்படியெல்லாம் பாதிக்கப்பட்டு வளர்பவர்கள்தான் பின்நாளில் ஒரு சைக்கோபாத்தாக மாறுகிறார்கள். 

இப்படி சைக்கோபாத்திற்கு இரண்டு தியேரிதான் இருக்கிறது. ஆனால், நம் தமிழ்நாட்டில் பயன்படுத்தும் சைக்கோ இது இல்லை. என்னையே சைக்கோ என்கிறார்கள். ஆனால், நான் இதுவரை யாரையுமே கொலை செய்ததில்லை. இதை சொல்வதுதான் இந்த படம். ஒரு கார்ப்பரேட்டில் பணிபுரியும் மேலதிகாரி, இந்த வேலையை முடிக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். இதை கார்ப்பரேட் சைக்கோபாத் என்கிறார்கள். நீங்கள் பாருங்கள் சேல்ஸ் வேலையில் இருப்பவர்கள் பலர் செயின் ஸ்மோக்கராக பலர் மாறிவிட்டார்கள். வேலைவிட்டு மாலை திரும்பியவுடன் மது அருந்துகின்றனர். அதேபோல ஆசைக்காட்டி, பாசம்காட்டி வளர்க்கும் பெண் வேறொரு மதத்தை, சாதியை சேர்ந்த பையனை காதலித்தால் அவளை கொல்கிறார்கள். இதெல்லாம் சைக்கோபாத்தான். இவர்கள் அதிகமாக அன்பு செலுத்துவார்கள். ஆனால், ஒரு அளவுகோளுக்கு அது வரும்போது எந்த எல்லைக்கும் போய்விடுவார்கள்” என்று கூறினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி; பர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Vijay Sethupathi directed by Mishkin; First look release

 

தமிழ் சினிமாவில் நாயகனாக ஆரம்பித்து இந்தி, தெலுங்கு சினிமாக்களில் வில்லனாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாகத் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். மெரி கிறிஸ்துமஸ், விடுதலை இரண்டாம் பாகம் ஆகியவை ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

 

இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு ‘டிரெயின்’ (Train) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த விஜய் சேதுபதி, தன்னுடைய வித்தியாசமான இயக்கத்தால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் மிஷ்கின். இவர்கள் இணைந்து ஒரு படம் உருவாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

 

 

Next Story

மிரட்டும் லுக்கில் ஆண்ட்ரியா ; 'பிசாசு 2' டீசர் வெளியீடு

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

Andrea in an intimidating look; 'Pisasu 2' Teaser Released

 

தமிழ் சினிமாவில் தன் தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மிஷ்கின் . இவர் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'பிசாசு 2' படத்தை இயக்கிமுடித்துள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

 

இந்நிலையில் 'பிசாசு 2' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. வழக்கமான மிஷ்கின் பட பாணியில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளிவந்துள்ள இந்த டீரில் வசனம் எதுவும் இடம்பெறவில்லை. ஆண்ட்ரியாவின் ஸ்கிரின் ப்ரசன்ஸ் பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.