Skip to main content

தன்னுடைய அடுத்த படம் குறித்து மிஷ்கின்... 

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் லண்டனில் உருவாகி வரும் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் நீக்கப்பட்டுவிட்டார் என்று அண்மையில் தகவல் ஒன்று வெளியாகி வருகிறது. மேலும் மிஷ்கின் ஏன் துப்பறிவாளன் படத்திலிருந்து விலகினேன் என்பதற்கு விளக்கம் தருவதுபோல ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், விஷால் சாட்டிலைட்டிலிருந்து குதிப்பதுபோல ஒரு சீன் யோசித்திருக்கிறேன் அதற்காக நூறு கோடி பட்ஜெட் கேட்டேன் என்று கிண்டலடிப்பதுபோல சொல்கிறார்.
 

myskin

 

 

இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தின் வெற்றி குறித்தும் அடுத்த படம் குறித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

“இதை மாபெரும் வெற்றி என்று கூறுவதை விட 'அளவில்லாத அன்பு' என்றே கூறுவேன். படத்தைப் பார்த்த மக்கள் எடுத்துச் சென்றதும், கொடுத்ததும் அதுதான். எந்த வகை ஜானராக இருக்கட்டும், எந்த வகை பின்புலத்தில் கதை சொன்னாலும், பார்க்கும் பார்வையாளன் உணர்வுபூர்வமாக உணர்ந்தால் மட்டுமே, அதனைக் கொண்டாடுவான்.

நான் இந்தப்படங்களைக் கண்மூடித்தனமான நம்பிக்கையில்தான் உருவாக்கினேன். ஆனால், இறுதியில் அளவிலா அன்பைப் பெற்றிருக்கிறேன். 'கண்மூடித்தனமான நம்பிக்கை, ஆத்மாவின் தேடல்' இரண்டும்தான் வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தம் என்பதை நம்புபவன் நான். உண்மை என்னவெனில் எனது 'பிசாசு' நாயகன் சித்தார்த், 'துப்பறிவாளன்' கணியன் பூங்குன்றன், 'சைக்கோ' கௌதம் அனைவரும் இந்த மந்திரத்தை நம்புபவர்களே.

ரசிகர்கள் இதனை வாழ்வின் அன்பாக எடுத்துச் செல்ல வேண்டுமென்பதே என் விருப்பம். நான் வெகு பணிவுடன் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் பணிபுரிந்த நடிக, நடிகையர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விமர்சகர்கள், என் வளர்ச்சியை விரும்பும் அன்பு உள்ளங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனக்குத் தனித்துவ வெற்றி தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் அனைவரையும் மகிழ்விக்கும் திரைப்பயணத்தைத் தொடர விரும்புகிறேன். மிக விரைவில் எனது அடுத்த பயணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறேன்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

பலரும் இதில் துப்பறிவாளன் 2 படம் குறித்து மிஷ்கின் எதுவும் தெரிவிக்காததால் தான் துப்பறிவாளன் 2 வில் இல்லை என்பதை சூசகமாக தெரிவிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். அந்த படத்தின் தயாரிப்பாளர் விஷால்தான் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை தர வேண்டும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் நான் இல்லை” - விஷால்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 Vishal says I am not one to say that I will come to politics and then back off

மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே தனது அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் விஷால். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து விஷால், “இனி வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்கமாட்டேன்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். .

இந்த நிலையில், விஷால் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் இல்லை. சினிமா போன்று அரசியல் கிடையாது. அரசியல் என்பது சமூக சேவை. அது துறை கிடையாது. அரசியலை பொழுதுபோக்காக பார்க்காமல் மக்களுக்கு செய்யும் சேவையாக பார்க்க வேண்டும். எல்லாரும் அரசியல்வாதிகள் தான். 2026 ஆம் ஆண்டில் தேர்தல் வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் சேவை செய்வதற்கு இத்தனை கட்சிகள் தேவையில்லை. தற்போது அதிக கட்சிகள் உள்ளன. நல்லது செய்ய முடியும் என்றால் மட்டுமே அரசியலுக்கு வருவேன்” என்று கூறினார். 

Next Story

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி; பர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Vijay Sethupathi directed by Mishkin; First look release

 

தமிழ் சினிமாவில் நாயகனாக ஆரம்பித்து இந்தி, தெலுங்கு சினிமாக்களில் வில்லனாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாகத் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். மெரி கிறிஸ்துமஸ், விடுதலை இரண்டாம் பாகம் ஆகியவை ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

 

இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு ‘டிரெயின்’ (Train) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த விஜய் சேதுபதி, தன்னுடைய வித்தியாசமான இயக்கத்தால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் மிஷ்கின். இவர்கள் இணைந்து ஒரு படம் உருவாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.