2008-ஆம் ஆண்டு சசிகுமார்,ஜெய்நடிப்பில் வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. இப்படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் திரையுலகிற்கு அறிமுகமானார் . மதுரையில் 80-களில்நடக்கும்கதைக்களத்தைகொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் சுவாதி, கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜேம்ஸ்வசந்தன்இசைபணிகளை மேற்கொண்டிருந்தார்.
சிறியபட்ஜெட்டில்உருவாகி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்லவரவேற்பைபெற்றது.குறிப்பாகபலரும் 'ஒளிப்பதிவு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு' என அனைத்து துறைகளிலும் படம் சிறப்பாக இருந்ததுஎனப்பாராட்டினர். பிரபல பாலிவுட் இயக்குநர்அனுராக்காஷ்யப், 'கேங்ஸ்ஆஃப்வசேய்பூர்' படத்தை எடுக்க எனக்குஇன்ஸ்பிரஷனாகஇருந்ததே 'சுப்ரமணியபுரம்' படம் தான்'எனப்பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்சினிமாவில்தவிர்க்கமுடியாதகேங்ஸ்டர்படங்களின்லிஸ்டில்இருக்கும் 'சுப்ரமணியபுரம்' படம் வெளியாகி இன்றுடன் (04.07.2022) 14 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சசிகுமார் தனதுட்விட்டர்பக்கத்தில், "ஜூலை 4 எனக்கு எப்பொழுதுமே ஒருஸ்பெஷல். காரணம் 'சுப்ரமணியபுரம்' 14 வருடங்களுக்கு முன் இதே நாளில்தான் வெளியானது. நேற்று வெளியானது போல் இருக்கிறது. இன்று வரை படத்தை மக்கள் மதிக்கும் விதத்தை நான் தாழ்மையோடுஏற்றுக்கொள்கிறேன். விரைவில் நீங்கள் ஒருசெய்தியைகேட்பீர்கள், எனது அடுத்த அவதாரம், கண்டிப்பாக இயக்குநர் தான்"எனக்குறிப்பிட்டிருந்தார். நீண்டஇடைவெளிக்குபிறகு இயக்குவதில் ஆர்வம் காட்டி வரும் சசிகுமாருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
July 4 will always spl to me #Subramaniyapuram was released on this day 14 years ago. It just feels like yesterday. I’m humbled by the way people revere it, until today. Very soon you will hear the news about my Nxt venture, of course, as a filmmaker #14YearsOfSubramaniyapuram pic.twitter.com/irCmUIysgE
— M.Sasikumar (@SasikumarDir) July 4, 2022