Skip to main content

"படத்தில் என் பெயர் ரோல்ஸ் ராய்ஸ்" - தயாரிப்பாளருக்கு நினைவூட்டிய சதிஷ்

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

"My name in the movie is Rolls Royce" - Satish reminded the producer

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விக்ரம்'. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுவரை இந்தியாவில் மட்டும் 'விக்ரம்' திரைப்படம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதனிடையே கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்காக லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் காரும், உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக்கும் பரிசாக அளித்திருந்தார். மேலும்  சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் கடிகாரத்தை பரிசளித்தார். இது தொடர்பான புகைப்படங்களை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கமல்ஹாசனுக்கு நன்றியும்  தெரிவித்திருந்தார்.  

 

இந்நிலையில் காமெடி நடிகர் சதிஷ் நடிகர் சூர்யாவின் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, " ஹாய் எஸ். ஆர் பிரபு ப்ரோ. 'கணம்' படத்தில் என் பெயர் ரோல்ஸ் ராய்ஸ் " என எஸ். ஆர் பிரபுவை டேக் செய்து விளையாட்டாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த எஸ்.ஆர் பிரபு, " ரீலீசிற்கு முன்னாடி ஊருல திருவிழா வருது ப்ரோ. அதுல வாங்கி வச்சிடுவோம் " என குறிப்பிட்டுள்ளார். காமெடி நடிகர் சதிஷ், எஸ். ஆர் பிரபு தயாரிப்பில் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் 'கணம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் சினிமாவுக்குள் வந்ததற்கான பலன் அடைந்ததாக சந்தோஷப்பட்டேன்” - சதீஷ்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
sathish about vijay

வெங்கி இயக்கத்தில் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘வித்தைக்காரன்’. இதில் சிம்ரன் குப்தா, தாரிணி, ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா உட்பட பலர் நடித்துள்ளனர். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு விபிஆர் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

அப்போது பேசிய சதீஷ் நிறைய பேருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “விஜய் சாருக்கு மிகப் பெரிய நன்றி. அவர் கையிலிருந்துதான் இயக்குநர் இப்படத்திற்கான செக் வாங்கினார். அவர் தீவிர விஜய் ரசிகர். விஜய் சார் கட்சி பெயர் அறிவிப்பதற்கு முன்னாடி நாள் என்னை அழைத்திருந்தார். பார்த்தவுடனே அவர் சொன்ன முதல் வார்த்தை, ‘கான்ஜூரிங் கண்ணப்பன் சூப்பர் ஹிட்டுப்பா...’. இந்த வார்த்தை அவர் சொல்லி கேட்கும்போது, உண்மையிலே அவ்ளோ சந்தோஷமா இருந்தது. அவர் காஞ்ஜூரிங் கண்ணப்பன் பார்த்திருக்கார், அதை பற்றி என்னிடம் பேச வேண்டும் என நினைத்திருக்கிறார் என்பதே மிகப்பெரிய ஒரு வெற்றியாக இருந்தது. நான் சினிமா வந்ததற்கான பலன் அடைந்ததாக சந்தோஷப்பட்டேன். அவர் இப்போது அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறார். ஒரு ரசிகனாக அவர் அரசியலிலும் வெற்றி பெற வேண்டிக்கிறேன்” என்றார்.

கான்ஜூரிங் கண்ணப்பன் கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி வெளியானது. சதிஷ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பேய் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

விஜயகாந்த்தின் நினைவிடத்தில் கார்த்தி கண்கலங்கியபடி அஞ்சலி!

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
karthi pays tribute to vijayakanth in his memorial

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

மேலும் அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த்தின் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட சிலர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தனர். பின்பு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் சிவகுமார், கார்த்தி தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மற்றும் மலை வளையம் வைத்து மரியாதை செய்தனர். அப்போது கார்த்தி கண்கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மறைந்த தினத்தன்று கார்த்தி உருக்கமுடன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.