Skip to main content

“அறிவு மட்டும் போதுமானால் எல்லோரும்...”- இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

sean

 

சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது சகஜம்தான் சில நேரங்களில் அது சமூக ஊடகங்களைக் கடந்து வழக்குகளாகவும் போராட்டங்களாகவும் உருவெடுப்பதும் உண்டு. அதுவும் இந்தக் கரோனா காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான சமூக ஊடகப் பயன்பாடு இருக்கிறது. அதை யூ-ட்யூபர்களும், சோஷியல் மீடியா பிரபலங்களும் நன்றாகப் பயன்படுத்துகின்றனர். லேட்டஸ்ட் சர்ச்சையாக ‘கந்த சஷ்டி’ கவசம் குறித்த வீடியோவும், இன்னொருவர் வரைந்த கார்ட்டூனும் பல விவாதங்களை எழுப்பி வருகின்றன. பொதுவாக சினிமா பிரபலங்கள் இதுபோன்ற விஷயங்களில் எந்தச் சார்பும் எடுக்காமல் ஒதுங்கிக்கொள்வார்கள். வெகுசிலரே கருத்துத் தெரிவிப்பார்கள். 


அந்த வகையில் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் பிரசன்னா இதற்குத் தன்னுடைய கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதுபோல இசையமைப்பாளர் ஷால் ரோல்டன் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், “ஞான முருகனை மக்கள் நாடுவது அவன் கருணையை மட்டும் வேண்டி அல்ல. அவன் அன்பில் குளிப்பதற்காக. அறிவு மட்டும் போதுமானால் எல்லோரும் ஞானியாகிவிடலாமே! அனுபவித்தால்தானே புரியும்! எல்லாம் அவனுக்குத் தெரியும். தூற்றுவார் தூற்றட்டும். விட்டுவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"வாய் கிழிய பேசுவார், அவரும் இன்று விலை போகிவிட்டார்" - கம்யூனிச இயக்குநரை சாடிய ஷான் ரோல்டன்

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Sean Roldan tweet about his friend and director

 

தமிழில் 'வாயை மூடி பேசவும்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஷான் ரோல்டன் தொடர்ந்து 'முண்டாசுப்பட்டி', 'ப.பாண்டி', 'மெஹந்தி சர்க்கஸ்' உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானார். கடைசியாக ஞானவேல் இயக்கத்தில் வெளியான 'ஜெய் பீம்' படத்தில் இசையமைத்திருந்தார். 

 

இந்நிலையில் ஷான் ரோல்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "என் நண்பர் இயக்குநர் ஒருவர் கம்யூனிச சித்தாந்தத்தை தன் உயிர்மூச்சாய் கொண்டவர். எங்கள் பிணைப்பையும், கலை சார்ந்த கெமிஸ்ட்ரியையும் இந்த திரையுலகம் நன்கு அறியும். ஆனால், அவரும் இன்று வியாபார கோட்பாட்டுக்கு விலை போனது வருத்தத்தை அளிக்கிறது. சித்தாந்தங்களை இங்கு வாய் கிழிய பேசுவார்கள். ஆனால், நடைமுறையில் இவையெல்லாம் நம் தமிழ்நாட்டில் போணியாவதில்லை என்பதே நிதர்சனம். இனி, சித்தாந்தம் என்ற பெயரில் வாய் சவடால் விடுபவர்களை புறக்கணியுங்கள். மார்க்கெட் தான் நம் கடவுள்" என குறிப்பிட்டுள்ளார்.  

 

இவரது பதிவு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ராஜு முருகன் மற்றும் ஞானவேல் ஆகியோர் தொடர்ச்சியாக கம்யூனிச சித்தாந்தம் குறித்து பேசுபவர்களாக அறியப்படுகிறார்கள். இருவருடனும் ஷான் ரோல்டன் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

மூன்று லட்சம் பார்வைகளைக் கடந்து கவனம் ஈர்க்கும் 'பறை' தனியிசைப் பாடல் 

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

Parai

 

குமரன் இயக்கத்தில் பிரபல இசையமைப்பாளரான ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ளது 'பறை' தனி இசைப்பாடல். பறை இசைக்கலைஞரின் சடலத்தை ஊருக்குள் எடுத்துவர நிலவும் எதிர்ப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கான வரிகளை கே.லோகன் மற்றும் ஷான் ரோல்டன் எழுதியுள்ளனர். இப்பாடலை இயக்கியுள்ள குமரன், கதிர் நடிப்பில் வெளியான ஜாடா படத்தை இயக்கியவர் ஆவார். நேற்று நடைபெற்ற இப்பாடல் வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இயக்குநர் குமரன், தா.செ.ஞானவேல், நடிகர் ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

 

ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனம்பெற்ற இப்பாடல் யூடியூப் தளத்தில் ஒரே நாளில் மூன்று லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் இப்பாடல் குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.