Skip to main content

"சமரசமற்ற இயக்குநர் வெற்றிமாறன்" - குணச்சித்திர நடிகர் மூணார் ரமேஷ் புகழாரம்

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

Munnar Ramesh Interview

 

தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்தி  குணச்சித்திர நடிகராக வலம் வரும் மூணார் ரமேஷ் அவர்களை நமது நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது அவர் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

 

மூணார் ரமேஷ் பேசியதாவது “என்னுடைய சொந்த ஊர் மூணார் என்பதால் மூணார் ரமேஷ் என்கிற பெயர் வந்தது. சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் அடுத்தடுத்த நிலைக்கு வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். வெற்றிமாறன் சாரோடு நீண்ட நாள் பழக்கம் உள்ளது. அந்த நட்பும், என்னுடைய கரியருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற அவருடைய எண்ணமும் தான் அவர் தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் வழங்குவதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். அவருடைய படைப்புகளின் மேல் அனைவருக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது”.

 

விடுதலை படத்தின் படப்பிடிப்பு மிகவும் சவாலானதாக இருந்தது. அனைத்தையும் ராவாக எடுக்க வேண்டும் என்று நினைப்பார் வெற்றிமாறன். இயற்கை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் எங்களுக்கு இருந்தன. எதிலும் சமரசம் செய்துகொள்ளாத இயக்குநராக வெற்றிமாறன் இருப்பதால் தான் அவர் படப்பிடிப்புக்கு நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கிறார். ஒரு படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை அதுபற்றிய சிந்தனையிலேயே அவர் இருப்பார். படப்பிடிப்பு முடியும் வரை படம் பற்றிய பேச்சுக்களையே விரும்புவார். அந்த நேரங்களில் அவரை யாரும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது.

 

அவருடைய படங்களில் எனக்குக் கிடைக்கும் நல்ல பெயர் அனைத்தும் வெற்றிமாறன் சாரையே சாரும். சூரி சாரிடம் வெற்றிமாறன் சார் சில புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தார். வெற்றிமாறன் சாருடைய அணுகுமுறைக்கு சூரி சார் விரைவில் பொருந்திப் போனார். தன்னுடைய நடிப்பு முறையையே மாற்றிக் கொண்டார். யாரையும் மாற்றுவதற்கான மந்திரம் வெற்றிமாறன் சாரிடம் இருக்கிறது. புதுப்பேட்டை படத்தில் நடிக்கும்போது என்னிடம் உருவம் மட்டும் தான் இருந்தது. என்னை நடிக்க வைத்தது முழுக்க முழுக்க செல்வராகவன் தான். 

 

புதுப்பேட்டை, வடசென்னை ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அது நடக்கும் என்று நம்புகிறேன். வடசென்னை 2 படம் நிச்சயம் வரும் என்று வெற்றிமாறன் சார் சொல்லியிருக்கிறார். அது போன்ற படங்களை அவரால் தான் சிறந்த முறையில் எடுக்க முடியும். லால் சலாம் படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடந்து வருகிறது. ஐஸ்வர்யா மேடம் மிகவும் வேகமாக வேலை செய்கிறார். ரஜினி சாரின் கேமியோவும் அதில் இருக்கிறது. ரஜினி சாரின் தீவிர ரசிகன் நான். அவருடைய பண்பும் ஆன்மீகமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரோடு இந்தப் படத்தில் நானும் ஒரு காட்சியில் நடிக்கும் வாய்ப்பு வருமா என்கிற எதிர்பார்ப்போடு இருக்கிறேன்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

குரூப் 2 பணியிடங்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Interview for Group 2 posts from today

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது.

இந்நிலையில் சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் இன்று (12.02.2024) முதல் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“நல்ல இயக்குநர்கள் கிடைத்தது எனக்கு லக்கி தான்” - நிவேதிதா சதீஸ்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Nivedhithaa Sathish Interview

சில்லுக்கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்த நிவேதிதா சதீஸ், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் நம்மோடு பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் தன்னுடைய திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

சில்லுக்கருப்படி படம் தான் திரையரங்கில் வெளியான என்னுடைய முதல் படம். இன்றும் சோசியல் மீடியாவில் யாராவது ஒரு க்ளிப்பிங்க்ஸ் எடுத்து ஷார்ட்ஸா ஷேர் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்.  அதற்கடுத்தபடியாக வெளியான செத்தும் ஆயிரம் பொன்னும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது, நல்ல இயக்குநர்கள் எனக்கு அமைந்ததை நான் எனக்கு கிடைத்த லக்கியாக பார்க்கிறேன். 

ஆக்ஷன் படங்களில் நடிக்கணும், பீரியட்ஸ் படங்களில் நடிக்கணும், தனுஷ் கூட நடிக்கணும் இப்படி தனித்தனியாக ஆசை இருந்தது. இதெல்லாமே சேர்த்து ஒரே படமாக கேப்டன் மில்லர் அமைந்துவிட்டது. கேப்டன் மில்லர் படத்தில் பெரிய ஜாம்பவான்கள் மத்தியில் நான் மட்டும் சின்ன வயது பிள்ளையாக இருப்பேன். எல்லோரும் என்னை கடைக்குட்டி என்றுதான் கூப்டுவாங்க. 

இந்த படத்திற்காக என்னை மாதிரியான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எதுக்கு என்னை மாதிரியான பொண்ணு நானே நடிக்க தயாராத்தானே இருக்கேன்னு நினைச்சேன். அப்படியாக எனக்கு வாய்ப்பு வந்தது. படத்தில் என் கேரக்டருக்காக நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்கச் சொன்னாரு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்து முடித்ததாக நம்புகிறேன்.