ufu

Advertisment

Advertisment

ஏ.வி.எம். நிறுவனம் தயாரிப்பில் 1983ஆம் ஆண்டு பாக்யராஜ் - ஊர்வசி நடிப்பில் வெளியான 'முந்தானை முடிச்சி' படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து மாபெரும் வெற்றிபெற்றது. பாக்யராஜ் இயக்கியிருந்த இப்படம் 25 வாரங்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்டு அவருக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதையும் பெற்றுத் தந்தது. மேலும் இப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றிபெற்றது. இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு 'முந்தானை முடிச்சி' படம் மீண்டும் ரீமேக்காகவுள்ளது. இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை ஏ.வி.எம். சரவணனிடமிருந்து ஜே.எஸ்.பி. சதீஷ் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தை மீண்டும் கே.பாக்யராஜ் இயக்கவுள்ளார். மேலும் நாயகனாக நடிகர் சசிகுமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இப்படத்தின் இதர கதாபாத்திரங்களுக்கான தேர்வு கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் நடைபெறவுள்ளது. மேலும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.