Mukesh, Edavela Babu get anticipatory bail hema committee report issue related case

மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்கு தொடர்ந்து நடந்து வருவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது. பிரபல நடிகைக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து, படப்பிடிப்பில் நடிகைகள் மற்றும் பணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது கேரள அரசு. இக்குழு கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில முதல்வரிடம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால் அந்த ஆய்வறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இதையடுத்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று சம்பந்தப்பட்ட திரை பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறது. இதுவரை இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, இடவேள பாபு, மணியம் பிள்ளை ராஜு, பாபுராஜ் உள்ளிட்டோர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் எதிரொலியாக தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் ஹேமா கமிட்டி போல் ஒரு கமிட்டி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள அரசு, விடுபட்ட பக்கங்கள் உட்பட முழுமையான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் நடிகர் மற்றும் எம்.எல்.ஏ. முகேஷ், தன் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தில் தான சொல்லப்பட்டுள்ள பாலியல் புகார் என மறுப்பு தெரிவித்து முன் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் முகேஷ் தரப்பில் தன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து முகேஷுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது. முன்னதாக எம்.எல்.ஏ. முகேஷ் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் கேரள அரசின் குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில் அவர் ராஜினாமா செய்யத் தேவையில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு ஆலோசித்து முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இடவேள பாபுவும் முன் ஜாமீன் கோரி மனு கொடுத்திருந்தார். அவருக்கும் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment