நாமினேஷனில் இருந்த சாக்ஷி, அபிராமி மற்றும் லாஸ்லியாவில் யார் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கையில் சாக்ஷி எலிமினேட் செய்யப்பட்டார். இதனையடுத்து கெஸ்ட்டாக வனிதா உள்ளே வந்து பார்வையாளர்கள் முதல் ஹவுஸ் மேட்ஸ் வரை அதிர்ச்சியை கொடுத்தார். உள்ளே வந்தவுடன் வழக்கம்போல தன்னுடைய அதிகாரத்தை ஒவ்வொரு போட்டியாளர் மேலும் காட்ட தொடங்கினார்.
இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் அபிராமியிடம் முகேன் பற்றின பெர்ஸனல் விஷயங்களை சொல்லிக்கொண்டு அவருக்கு அட்வைஸ் செய்து வருகிறார். “அவன் ஹீரோ ஆகிட்டான், நீ ஜீரோ ஆகிட்ட” என்று அபிராமியிடம் முகேன் பற்றி கூறிவருகிறார்.
இதனையடுத்து வெளியான புரோமோவில், முகென் மற்றும் அபிராமி இருவருடைய பாஞ்சாயத்து என்ன என்பதை தீர விசாரிக்க அனைத்து ஹவுஸ்மேட்ஸும் சூழ்ந்து உட்கார்ந்து இருக்கின்றனர். அதன்பின் அபிராமி, ‘நான் அர்த்ததில்லா பண்ணேன்’ என்று ஹைபர் ஆகிறார். திடீரென கோபப்படும் குணாதிசியத்தை கொண்ட முகென், உட்கார்ந்திருக்கும் சேரை தூக்குகிறார். மற்ற ஹவுஸ் மேட்ஸ் அவரை சமாதானம் செய்கிறார்கள்.