“பார்க்கிங் மாதிரி கதை என நினைத்தேன்” - எம் எஸ் பாஸ்கர் 

ms bhaskar speech at akkaran movie press meet

அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘அக்கரன்’. குன்றம் ப்ரொடக்‌ஷன் மற்றும் சிவானி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கபாலி விஷ் வந்த், வெண்பா, ஆகாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.ஹரி இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நடந்து முடிந்துள்ளது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். எம் எஸ் பாஸ்கர் பேசுகையில், “இந்தப்படத்திற்கு என் அக்கா மகன் மது வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்க தான் லீட் கேரக்டர் செய்யனும் என்றார். சரிப்பா கதை கேட்கிறேன் என்றேன். பார்க்கிங் மாதிரி நாயகனுக்கும் எனக்குமான கதையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கதை படு வில்லங்கமாக இருந்தது. இயக்குநரிடம் வேறு ஹீரோ நடிக்கலாமே என்றேன், ஆனால் அந்த வயது, நடிப்புக்கு நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் எனச் சொல்லிச் சம்மதிக்க வைத்தார்.

எல்லோருடைய முயற்சியால், மிக அழகாகக் கோர்த்து, இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். மகள்கள் என்றாலே நான் உருகிவிடுவேன், வெண்பாவும், பிரியதர்ஷினியும் என் மகள்களாக அருமையாக நடித்துள்ளார்கள். ஷூட்டிங் ரொம்ப ஜாலியாக, மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மண் புழு கூட மிதித்தால் திரும்பக் கடிக்க வரும் அது போல் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதை என்றார் இயக்குநர், அந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தது” என்றார்.

ms bhaskar
இதையும் படியுங்கள்
Subscribe