Skip to main content

''தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்!'' -  எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமான வேண்டுகோள்!

Published on 10/04/2020 | Edited on 10/04/2020


கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கரோனா அச்சம் தொடர்பாக இளைஞர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்...

 

jfjf

 

"நான் இளைஞர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நிலைமை ரொம்ப சீரியஸாக போய்க் கொண்டிருக்கிறது. அரசாங்கம் எப்படியாவது இந்த வைரஸைக் கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று பாடுபடுகிறது. காரணமே இல்லாமல் வெளியே சுற்றுவது, தேவையில்லாமல் காவல்துறையினருக்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவு கொடுப்பது என்று நடந்து கொள்ளாதீர்கள். வீட்டில் அடங்கி இருங்கள். பெற்றோர்களுக்கு உதவியாக இருங்கள். இந்த வைரஸை ஒழிப்பதற்கு மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். என்னை விட நீங்கள் அனைவரும் சிறுபிள்ளைகளாகத் தான் இருப்பீர்கள். இருந்தாலும் உங்களை எல்லாம் இருகரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து அரசாங்கமும், பெற்றோர்களும் சொல்வதைக் கேளுங்கள். இந்த வைரஸை ஒழிப்பதற்கு உங்களால் ஆன உதவியைச் செய்யுங்கள். நீங்கள் காரணமில்லாமல் வெளியில் வந்து சுற்றாமல் வீட்டிற்குள் இருந்தாலே, நிச்சயமாக இந்த வைரஸை ஒழிக்கலாம். தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்" எனக் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பார்க்கிங் மாதிரி கதை என நினைத்தேன்” - எம் எஸ் பாஸ்கர் 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ms bhaskar speech at akkaran movie press meet

அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘அக்கரன்’. குன்றம் ப்ரொடக்‌ஷன் மற்றும் சிவானி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கபாலி விஷ் வந்த், வெண்பா, ஆகாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.ஹரி இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நடந்து முடிந்துள்ளது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். எம் எஸ் பாஸ்கர் பேசுகையில், “இந்தப்படத்திற்கு என் அக்கா மகன் மது வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்க தான் லீட் கேரக்டர் செய்யனும் என்றார். சரிப்பா கதை கேட்கிறேன் என்றேன். பார்க்கிங் மாதிரி நாயகனுக்கும் எனக்குமான கதையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கதை படு வில்லங்கமாக இருந்தது. இயக்குநரிடம் வேறு ஹீரோ நடிக்கலாமே என்றேன், ஆனால் அந்த வயது, நடிப்புக்கு நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் எனச் சொல்லிச் சம்மதிக்க வைத்தார். 

எல்லோருடைய முயற்சியால், மிக அழகாகக் கோர்த்து, இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். மகள்கள் என்றாலே நான் உருகிவிடுவேன், வெண்பாவும், பிரியதர்ஷினியும்  என் மகள்களாக அருமையாக நடித்துள்ளார்கள். ஷூட்டிங் ரொம்ப ஜாலியாக, மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மண் புழு கூட மிதித்தால் திரும்பக் கடிக்க வரும் அது போல் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதை என்றார் இயக்குநர், அந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தது” என்றார். 

Next Story

“என்னுடைய இதயத்தையே அவரது காலடியில் வைக்கிற மாதிரி” - எம்.எஸ். பாஸ்கர் உருக்கம்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
ms bhaskar movie akkaran release update announced in vijayakanth memorial

அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘அக்கரன்’. குன்றம் ப்ரொடக்‌ஷன் மற்றும் சிவானி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கபாலி விஷ் வந்த், வெண்பா, ஆகாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.ஹரி இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை விஜயகாந்த்தின் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எம்.எஸ். பாஸ்கர், “எனக்கு வாய்ப்பளித்தவர் என்னுடைய அண்ணன் விஜயகாந்த். எனக்கு நடிகர் சங்க கார்டு வாங்கி கொடுத்ததே அவர்தான். அதை வச்சுதான் இன்றுவரையிலும் நடிப்பு துறையில் இருந்துக்கிட்டு இருக்கேன். அப்படி இருக்கும்போது, இதை செய்வது நன்றிக் கடன். ஆனால் அது சாதரணமான வார்த்தை. அவருக்கு என்னுடைய இதயத்தையே அவரது காலடியில் வைக்கிற மாதிரி.

எங்கள் படக்குழு அனைவரும், அண்ணனுடைய பாதத்துக்கிட்ட வச்சுதான் இந்த படத்தோட பெயரை அறிவிக்கணும் என முடிவெடுத்தோம். அதுதான் எல்லாருடைய ஆசையும் கூட. அண்ணன் உயிரோடு இருந்திருந்தால், அண்ணியோடு சேர்ந்து பட அறிவிப்பை வெளியிட்டிருப்பார். அவர் இல்லை எனச் சொல்ல முடியாது. எல்லார் இதயத்திலும் இருக்கார். இறைவனாக இந்த இடத்தில் இருக்கார். அவருடைய ஆசீர்வாதம் எல்லாரிடத்திலும் இருக்கும்” என உருக்கமுடன் முடித்தார்.