Skip to main content

"சில பிரச்சனைகளை சொல்லி மனவருத்தப்பட்டார்" - மனோபாலா குறித்து எம்.எஸ்.பாஸ்கர்

Published on 04/05/2023 | Edited on 04/05/2023

 

ms baskar about manobala

 

பிரபல நடிகரும் இயக்குநருமான மனோபாலா நேற்று உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி விஜயகாந்த், சீமான் என பல்வேறு அரசியல் தலைவர்களும் ரஜினி, கமல் தொடங்கி கார்த்தி, ஜெயம் ரவி என பல்வேறு திரை பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். 

 

மேலும், சென்னை சாலிகிராமத்தில் உள்ள மனோபாலாவின் வீட்டில் விஜய், விஜய் சேதுபதி, ஆர்யா, சூரி, ஷங்கர் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து அவரை பற்றிய நினைவுகளை பகிர்ந்தனர்.

 

அப்போது நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசுகையில், "எல்லா படங்களையும் பார்த்துவிடுவார். எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். அனைத்து வீட்டின் நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வார். கடைசியாக அவரை கோடாரம் படத்தின் படப்பிடிப்பில் சந்தித்தேன். அப்போது அவரது ரூமில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தோம். அவருடைய சில பிரச்சனைகளை சொல்லி மனவருத்தப்பட்டார். ரொம்ப நெருக்கமானவர்களிடம் அவரது பிரச்சனையை சொல்லி ஆற்றாமையை வெளிப்படுத்தி ஆறுதல் தேடி கொள்ளக்கூடிய ஒரு நபர். அதே சமயம் நமக்கு ஏதாவது ஒரு கஷ்டம் இருந்தாலும் ஆறுதல் சொல்லக் கூடிய ஒரு நபர். இந்த வருடத்தில் எனக்கு ஏற்பட்ட இரண்டாவது ஒரு இழப்பு. முதலில் மயில்சாமி, இரண்டாவது மனோபாலா அண்ணன்" என உருக்கமாகப் பேசினார். 

 

இயக்குநர் ஷங்கர் பேசுகையில், "எல்லா நிகழ்ச்சிகளுக்கும் மனோபாலாவை கூப்பிட்டு விடுவார்கள். சுற்றி உள்ள எல்லாரையும் மகிழ்விப்பார். அவர் வந்திருப்பதாகச் சொல்லி எங்களையும் கூப்பிடுவார்கள். இப்போது நான் இயக்கும் இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார். நகைச்சுவை கதாபாத்திரம் இல்லை. ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பார்க்கிங் மாதிரி கதை என நினைத்தேன்” - எம் எஸ் பாஸ்கர் 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ms bhaskar speech at akkaran movie press meet

அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘அக்கரன்’. குன்றம் ப்ரொடக்‌ஷன் மற்றும் சிவானி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கபாலி விஷ் வந்த், வெண்பா, ஆகாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.ஹரி இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நடந்து முடிந்துள்ளது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். எம் எஸ் பாஸ்கர் பேசுகையில், “இந்தப்படத்திற்கு என் அக்கா மகன் மது வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்க தான் லீட் கேரக்டர் செய்யனும் என்றார். சரிப்பா கதை கேட்கிறேன் என்றேன். பார்க்கிங் மாதிரி நாயகனுக்கும் எனக்குமான கதையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கதை படு வில்லங்கமாக இருந்தது. இயக்குநரிடம் வேறு ஹீரோ நடிக்கலாமே என்றேன், ஆனால் அந்த வயது, நடிப்புக்கு நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் எனச் சொல்லிச் சம்மதிக்க வைத்தார். 

எல்லோருடைய முயற்சியால், மிக அழகாகக் கோர்த்து, இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். மகள்கள் என்றாலே நான் உருகிவிடுவேன், வெண்பாவும், பிரியதர்ஷினியும்  என் மகள்களாக அருமையாக நடித்துள்ளார்கள். ஷூட்டிங் ரொம்ப ஜாலியாக, மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மண் புழு கூட மிதித்தால் திரும்பக் கடிக்க வரும் அது போல் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதை என்றார் இயக்குநர், அந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தது” என்றார். 

Next Story

“என்னுடைய இதயத்தையே அவரது காலடியில் வைக்கிற மாதிரி” - எம்.எஸ். பாஸ்கர் உருக்கம்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
ms bhaskar movie akkaran release update announced in vijayakanth memorial

அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘அக்கரன்’. குன்றம் ப்ரொடக்‌ஷன் மற்றும் சிவானி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கபாலி விஷ் வந்த், வெண்பா, ஆகாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.ஹரி இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை விஜயகாந்த்தின் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எம்.எஸ். பாஸ்கர், “எனக்கு வாய்ப்பளித்தவர் என்னுடைய அண்ணன் விஜயகாந்த். எனக்கு நடிகர் சங்க கார்டு வாங்கி கொடுத்ததே அவர்தான். அதை வச்சுதான் இன்றுவரையிலும் நடிப்பு துறையில் இருந்துக்கிட்டு இருக்கேன். அப்படி இருக்கும்போது, இதை செய்வது நன்றிக் கடன். ஆனால் அது சாதரணமான வார்த்தை. அவருக்கு என்னுடைய இதயத்தையே அவரது காலடியில் வைக்கிற மாதிரி.

எங்கள் படக்குழு அனைவரும், அண்ணனுடைய பாதத்துக்கிட்ட வச்சுதான் இந்த படத்தோட பெயரை அறிவிக்கணும் என முடிவெடுத்தோம். அதுதான் எல்லாருடைய ஆசையும் கூட. அண்ணன் உயிரோடு இருந்திருந்தால், அண்ணியோடு சேர்ந்து பட அறிவிப்பை வெளியிட்டிருப்பார். அவர் இல்லை எனச் சொல்ல முடியாது. எல்லார் இதயத்திலும் இருக்கார். இறைவனாக இந்த இடத்தில் இருக்கார். அவருடைய ஆசீர்வாதம் எல்லாரிடத்திலும் இருக்கும்” என உருக்கமுடன் முடித்தார்.