Skip to main content

2022 ஆம் ஆண்டு கூகுளில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்கள்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

Most searched Asians  2022 in google worldwide

 

2022 ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்', 'விக்ரம்', 'கே.ஜி.எஃப் 2', 'ஆர்.ஆர்.ஆர்', 'பிரம்மாஸ்திரா' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. இதில் பல படங்கள் எதிர்பார்த்ததுபோல் நல்ல வசூலையும் சில படங்கள் எதிர்பாராத தோல்வியையும் சந்தித்தன. 

 

இந்நிலையில், கூகுள் நிறுவனம் இந்தாண்டு தங்களது தளத்தில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தென்கொரியாவைச் சார்ந்த இசைக்குழுவான 'பிடிஎஸ்' (BTS)-இன் பாப் பாடகர்களான 'வி' என அழைக்கப்படும் கிம் டே-ஹியுங் மற்றும் ஜங்குக் ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். மூன்றாவது இடத்தில இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி உள்ளார். 

 

இந்த லிஸ்டில் தமிழ்த் திரைத்துறையைச் சார்ந்த நடிகர்களைப் பொறுத்தவரை விஜய் (15), சூர்யா (45), தனுஷ் (46), ரஜினிகாந்த (68), அஜித்குமார் (78)  ஆகிய இடங்களில் உள்ளனர்.

 

இந்தியத் திரை நடிகர்களைப் பொறுத்தவரை சல்மான்கான் (7), ஷாருக்கான் (9), அக்ஷய்குமார் (16), அமிதாப் பச்சன் (23), அல்லு அர்ஜுன் (25), ரன்பீர் கபூர் (28), ஆமீர் கான்(35), ஹ்ரித்திக் ரோஷன் (39), மகேஷ் பாபு (41), அஜய் தேவ்கன் (42), ராம் சரண் (57), ரன்வீர் சிங் (61), ஜூனியர் என்.டி.ஆர் (64), பிரபாஸ் (66), சிரஞ்சீவி (70), விஜய் தேவரகொண்டா (75) உள்ளிட்டோர் உள்ளனர். 

 

இந்தியத் திரை நடிகைகள் பொறுத்தவரை கத்ரினா கைஃப் (4), ஆலியா பட் (5),  பிரியங்கா சோப்ரா (10), கரீனா கபூர் (11), காஜல் அகர்வால் (13), தீபிகா படுகோனே (26), தமன்னா (31), நயன்தாரா (33), ஷ்ரத்தா கபூர் (40),  கஜோல் (44), அனுஷ்கா ஷெட்டி (47), அனுஷ்கா சர்மா (50), பூஜா ஹெக்டே (56), ஷில்பா ஷெட்டி (59), கியாரா அத்வானி (60), கீர்த்தி சுரேஷ் (62), சாய்பல்லவி (79), கங்கனா ரணாவத் (91), ரகுல் ப்ரீத் சிங் (96) உள்ளிட்டோர் உள்ளனர். 

 

இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பொறுத்தவரை, எம்.எஸ் தோனி (24), ரோஹித் சர்மா (32), சச்சின் டெண்டுல்கர் (51), ஹர்திக் பாண்டியா (58) உள்ளிட்டோர் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம், லியோ பட ஸ்டைலில் ரஜினி 171 - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
lokesh kanagaraj rajinikanth movie thalaivar 171 title teaser update

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அது தற்போது தள்ளி ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், புது போஸ்டரை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டைட்டில் டீசர் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக லோகேஷ் இயக்கிய விக்ரம் மற்றும் லியோ படங்களுக்கும் டைட்டில் டீசர் வெளியானது. இது இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதே ஃபார்முலாவை ரஜினி 171 படத்திலும் லோகேஷ் தொடர்கிறார். 

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.