Skip to main content

“எஸ்.ஜே. சூர்யா படம் பார்த்து வளர்ந்ததால, அவரோட நடிக்க யோசிச்சேன்” - ‘மான்ஸ்டர்’ ஹீரோயின்

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

‘ஒரு நாள் கூத்து’இயக்கிய நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மான்ஸ்டர்'. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தை, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. வருகிற மே 17ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இன்று சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. 
 

priya bavani shankar

 

 

அப்போது பேசிய ப்ரியா பவானி சங்கர், “இசை வெளியீட்டு விழா என்கிற ஃபார்மாலிட்டிக்காக நான் தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோவுக்கு நன்றி சொல்கிறேன். ஆனால், இது என்னுடைய படம்தான். எஸ்.ஜே சூர்யா சாருடன் படம் என்று முதலில் சொன்னபோது கொஞ்சம் எனக்கு இது செட்டாகுமா என்று இயக்குனரிடம் சொன்னேன். எஸ்.ஜே. சூர்யா சார் படங்களெல்லாம் பார்த்துதானே வளர்ந்திருக்கேன். நீங்கள் முதலில் கதையை கேட்டுவிட்டு பின்னர் சம்மதமா இல்லையா என சொல்லுங்கள் என்றார் இயக்குனர்.
 

ஷூட்டிங் தொடங்கியவுடன் என்னை அவ்வளவு நன்றாக அனைவரும் பார்த்துக்கொண்டார்கள். ஷூட்டிங் 25 நாட்கள் எனக்கு நடைபெற்றிருக்கும், நான் பயங்கரமாக எஞ்சாய் செய்த செட் இது. என்னுடன் நடிக்க எஸ்.ஜே. சூர்யா சார் மிகவும் பயந்து பயந்து நடித்தார். அவருக்கு அவ்வளவு டெம்பர் இருக்கும் என்று சூர்யா சாரின் துணை இயக்குனர் சொல்வார். ஆனால், ஹீரோவாக செட்டுக்குள் அவர் வரும்போது மிகவும் பொறுமையாக இருப்பார். அவர் பல நினைவுகளை பற்றி சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் துணை இயக்குனராக தொடங்கியதிலிருந்து இப்போதுவரை என்று பல நினைவுகளை பகிர்வார். அதேபோல கருணாகரனும் நிறைய பகிருந்துகொள்வார். இவர்கள் இருவரும் செட்டில் இருக்கும்போது நமக்கு மொபைல் போனே தேவைப்பாடு. இவர்களிடமே நிறைய பேசுவதற்கான கண்டெண்ட் இருக்கும். 
 

இயக்குனர் நெல்சனை பற்றி சொல்லவேண்டும் என்றால் அவர் மைண்டில் ஒன்றை வைத்திருப்பார். அதை புரிந்துகொண்டு நடிகர்கள் சரியாக செய்யும் வரை எடுத்துகொண்டே இருப்பார். அடுத்த நாளானாலும் சரி, அவர் நினைத்தைதான் எடுப்பார். அவருக்கு என்ன வேண்டும் என்பதில் கிளியராக இருக்கிறார். டப்பிங்கில் படத்தை பார்த்தேன் படம் நன்றாக வந்திருக்கிறது. நீங்களும் படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபகத் ஃபாசில் படத்தில் இணையும் எஸ் ஜே.சூர்யா - எகிறும் எதிர்பார்ப்பு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
sj surya fahad fazil movie tpdate

எஸ்.ஜே. சூர்யா தற்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் விக்ரமின் 62வது படத்தையும், தனுஷின் ராயன் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதில் ராயன் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துவிட்டது. விக்ரமின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழைத் தாண்டி தெலுங்கிலும் நானி நடிக்கும் ‘சரிபோதா சனிவாரம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த எஸ்.ஜே சூர்யா, தற்போது மலையாளத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் விபின் தாஸ் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே சூர்யாவும் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபகத் ஃபாசில் தற்போது தமிழில் ரஜினியின் வேட்டையன், வடிவேலுவுடன் மாரீசன், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2, உள்ளிட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார். மேலும் மலையாளத்தில் அவர் நடித்துள்ள ஆவேஷம் படம் வருகிற 11ஆம் தேதி வெளியாகிறது. இந்த சூழலில் ஃபகத் ஃபாசிலுடன் எஸ்.ஜே.சூர்யா இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

Next Story

“சர்வதேச தரம்” - தனுஷ் குறித்து எஸ்.ஜே. சூர்யா

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
sj suryah about dhanush raayan movie

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து படத்தில் செல்வராகவன் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த நிலையில், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திர லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  இப்போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, படம் குறித்து பதிவிட்ட எஸ்.ஜே. சூர்யா, “தனுஷ் சார், உங்கள் இயக்கத்தில் நடிப்பது சந்தோஷம். அதற்காக நன்றி. நான் முன்னதாக சொன்னது போல இப்படம் ரத்தமும் சதையுமாய் எமோஷ்னல் கலந்து சர்வதேச தரத்தில் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கோடை விருந்தாக இப்படம் இருக்கும் எனவும் குறிப்பிட்டு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.