Advertisment

"அவர் எப்போதும் நம் நினைவுகளில் இருப்பார்" - மோகன்லால் இரங்கல்!

bvdbd

'தேவதாஸ்', 'கங்கா யமுனா', 'ஆன், தஸ்தான்', 'மொகல்-இ-அஸாம்' உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப்குமார் வயது மூப்பு காரணாமாக காலமானார். அவருக்கு வயது 98. நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று (07.07.2021) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார்.

Advertisment

இவரது மறைவுக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில், மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்.. "நடிகர் திலீப் குமார் இந்திய சினிமாவின் மூத்த உறுப்பினர் ஆவார். அவர் எப்போதும் நம் நினைவுகளில் இருப்பார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். இந்த லெஜெண்ட்டின் ஆன்மா நித்திய அமைதி பெறட்டும்" என பதிவிட்டுள்ளார்.

Advertisment

dilip kumar mohanlal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe