Skip to main content

எதிர்பார்ப்புகளை அடைந்துவிடலாமா?- தனிஒருவன் 2 குறித்து மோகன் ராஜா

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

கடந்த 2015ஆம் ஆண்டில் வெளியான தனி ஒருவன் தமிழ் திரையுலக ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற படம். ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடித்த இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. அரவிந்த் சாமி நடித்த சித்தார்த் அபிமன்யூ கேரக்டரை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
 

mohan raja


இதனையடுத்து தனி ஒருவன் படத்திற்கு இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஜெயம் ரவியின் 25வது படமாக இது இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இன்னும்  இப்படத்திற்கான முதற்கட்ட வேலை முடிவடையாததால் ஜெயம் ரவியின் 25-வது படத்தை லட்சுமணனும், 26-வது படத்தை அஹமதுவும் இயக்குகின்றனர்.
 

இந்நிலையில், இயக்குனர் மோகன் ராஜா  ‘தனி ஒருவன் 2’ குறித்து ட்வீட் செய்து, ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளார்.
 

natpuna ennanu theriyuma


“ ‘தனி ஒருவன்’ அடுத்த பாகத்துக்கான கதை உருவாக்கத்தின் மிகச்சிறந்த தருணம்.
 

நான் என்னுடைய உதவியாளர்களிடம்: எதிர்பார்ப்புகளை அடைந்துவிடலாமா?
 

உதவியாளர்கள்: 200% சார்
 

mr.local


போன் அடிக்கிறது. இயக்குநர் ராம்: ராஜா, மறுபடி ‘தனி ஒருவன்’ பார்த்துக்கிட்டு இருக்கேன். மிகப்பெரிய உழைப்பு. எப்படி இப்படி? அடுத்த பாகத்தை ஜாக்கிரதையா பண்ணுங்க.
 

ஆர்வம் எப்போதும் ஜெயிக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதே காரணம் - கமல் படத்திலிருந்து வெளியேறும் மற்றொரு முன்னணி நடிகர் 

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
jayam ravi exist in kamal thug life movie

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னை திரும்பியுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது துல்கர் சல்மானை தொடர்ந்து ஜெயம் ரவியும் வெளியேறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவரும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

“படத் தலைப்பு இவருக்காகவே உருவானது போல் இருக்கிறது” - ஜெயம் ரவி

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
jeyam ravi speech at double tuckkerr audio launch

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ். பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட், சுனில் ரெட்டி, ஷா ரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், டெடி கோகுல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் 'டபுள் டக்கர்'. கோடை விடுமுறையில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 8000 மாணவர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஜெயம் ரவி, 'அயலான்' இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது ஜெயம் ரவி பேசுகையில், “எனக்கு இருக்கும் மிகச் சில நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தீரஜ். அவருக்காக இங்கு வருவதற்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருப்பது சந்தோஷம். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.

'டபுள் டக்கர்' எனும் தலைப்பு இவருக்காகவே உருவானது போல் இருக்கிறது, ஏனென்றால் மருத்துவர், நடிகர் என்று இரண்டு பரிமாணங்களிலும் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தீரஜ். வித்யாசாகர் அவர்களின் இசைக்கு சிறு வயது முதல் இருந்து ரசிகன் நான். அவர் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இளைஞர்களுடன் இணைந்து அவர் பணியாற்றியுள்ளார். அவரது இசை இந்த படத்திற்கு கட்டாயம் பெரிய பக்கபலமாக இருக்கும்." என்றார்.

வித்யாசாகர் பேசியதாவது, “டபுள் டக்கர் படத்தின் நாயகன் தீரஜ்ஜை ஒரு சிறுவனாக தெரியும், பின்னர் மருத்துவராக தெரியும். ஒரு நாள் அவர் என்னிடம் வந்து தான் திரைப்படங்களில் நடிப்பதாகவும் 'டபுள் டக்கர்' திரைப்படத்திற்கு நான் இசையமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர் இயக்குநர் மீரா மஹதி இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். எனக்கு மிகவும் பிடித்ததால் இசையமைக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்.