Advertisment

செய்தியாளரை தாக்கிய சம்பவம்; நேரில் சென்று மன்னிப்பு கேட்ட மூத்த நடிகர்

mohan babu visits journalist after he beaten and personally apologises

தெலுங்கு மூத்த நடிகரும் மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினருமான மோகன் பாபு சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் மோகன் பாபு தனது இளைய மகன் மனோஜ் மஞ்சு மீது சொத்து தகராறு தொடர்பாக ரச்சகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மனோஜும் அவரது மனைவி மோனிகாவும் 30 பேர்களை கொண்டு தனது வீட்டில் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை மிரட்டியதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார். ஆனால் அதை மறுத்த மனோஜ் மஞ்சு, சொத்துக்காக போராடவில்லை, சுயமரியாதைக்காக போராடுகிறேன் என செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் மோகன் பாபு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

இதையடுத்து கடந்த 10ஆம் தேதி மனோஜ் மஞ்சு, அவரது மனைவி மோனிகா மற்றும் இன்னும் சிலர் ஜல்பல்லியில் உள்ள மோகன் பாபுவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அப்போது வீட்டின் பாதுகாவலர்கள் கேட்டை திறக்க மறுக்க இதனால் மனோஜுக்கும் பாதுகாவலர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்பு கேட்டை தள்ளி மனோஜ் உள்ளே நுழைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட இந்த தகவல் அறிந்து அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை வீட்டை விட்டு வெளியே வந்த மோகன் பாபு அவர்களது மைக்கை பிடித்து தூக்கி எறிந்த படி தாக்கினார். அதில் ஒரு பத்திரிக்கையாளர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை தற்போது வரை சிசிக்கை பெற்று வருகிறார். இந்த சம்பவல் தொடர்பாக பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, அதன் பேரில் மோகன் பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இதையடுத்து மோகன் பாபு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். இதனிடையே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதாக தகவல் வெளியானது. மேலும் அவரிடம் காவல் துறையினர் வாக்கு மூலம் சேகரிக்க அவரது வீட்டுக்கு சென்ற போது அவர் இல்லை என்றும் தலைமறைவாக இருப்பதாகவும் இதனால் அவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பதாகவும் கூறப்பட்டது. அதோடு அவர் வழக்கில் இருந்து விடுவிக்க முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால் இத்தகவல் அனைத்தையும் மோகன் பாபு மறுத்து, “பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முன்ஜாமீன் நிராகரிக்கப்படவில்லை, தற்போது. நான் எனது வீட்டில் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன்” எனக் அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் பத்திரிக்கையாளரை மோகன் பாபு நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் அவர் குணமடைந்து வீடு திரும்பியவுடன் அங்கு வந்து சந்திப்பதாகவும் உறுதியளித்தார். மேலும் இந்த சம்பவ எதிரொலியாக தான் வைத்திருந்த இரட்டை குழல் துப்பாக்கியையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மோகன் பாபு வழக்கு குறித்து ரச்சகொண்டா காவல் ஆணையர் பேசுகையில், “மோகன் பாபு மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. அவரிடம் மருத்துவ சான்றிதழ் குறித்து கேட்டுள்ளோம். மேலும் விசாரணைக்கும் ஆஜராகும்படி நோட்டிஸ் அனுப்பியுள்ளோம். அவர் வருகிற 24ஆம் தேதி வரை நேரம் கேட்டுள்ளார். அன்று அவர் எங்கள் நோட்டீஸுக்கு விளக்கமளிக்கவில்லை என்றால் அவரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வோம்” என்றார்.

மோகன் பாபு தமிழில் 1970-களில் வெளியான அண்ணன் ஒரு கோயில், தாய்மீது சத்தியம், அன்னை ஒரு ஆலையம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் சூரரைப் போற்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

journalist TELUGU ACTOR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe