poonam pandey

இந்தியாவின் பிரபல நடிகையும் மாடலுமான பூனம் பாண்டே, அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு அதன் மூலம் கவனத்தை ஈர்ப்பவர்.

Advertisment

Advertisment

கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி கிரிக்கெட்டில் உலகக்கோப்பை வென்றால், தான் நிர்வாணமாக சாலையில் ஓடுவதாக கூறிபரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது ஊரடங்கு காலத்தில் அதை மதிக்காமல் தனதுகாதலருடன் காரில்சுற்றியதாக கைது செய்யப்பட்டுள்ளார். பூனம் பாண்டே நேற்று தனது ஆண் நண்பருடன் மும்பை மெரைன் டிரைவ் சாலையில் சொகுசு காரில் சென்றுள்ளார். கரோனா நேரத்தில் எவ்வித காரணமுமின்றி வெளியே வந்த காரணத்தால் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவருடைய சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை எச்சரித்து தற்சமயம் விடுவித்தனர்.