Skip to main content

அஜித் பட ஷூட்டில் நடிகர்கள், தொழிலாளர்கள் மொபைல் பயன்படுத்த தடை! 

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

விஸ்வாசம் படத்தின் பெரு வெற்றியை அடுத்து அஜித்குமார் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் நேர்கொண்ட பார்வை. இது ஹிந்தி படமான பிங்க்கின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹெச்.வினோத்தான் இயக்கினார். அனைவரும் எதிர்பார்த்ததை போலவே இந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பையும், ரசிகர்களிடையே பெரு ஆதரவையும் பெற்றது. 
 

nerkonda parvai


இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இதே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருடன் இணைந்து அஜித் நடிக்கும் படம்தான் வலிமை. இந்த படத்தின் பூஜை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே போடப்பட்டு, தற்போதுதான் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. இடையே ஷூட்டிங்கிறகான லொக்கேஷன், நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட பல வேலைகள் நடந்தது.
 

hero


இந்நிலையில் டிசம்பர் 10ஆம் தேதி வலிமை படத்தின் ஷூட்டிங் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய சண்டை காட்சி என்று சொல்லப்படுகிறது. பெரிய நடிகர்களின் படம் என்றால் அவர்களின் தோற்றத்திலிருந்து பலவிஷயங்கள் ரகசியம் காக்கப்பட்டு, அதை தியேட்டரில் சர்ப்ரைஸாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் அஜித் தோற்றம் மற்றும் படக்காட்சிகள் வெளியாவதை தடுக்க துணை நடிகர்-நடிகைகளும், பெப்சி தொழிலாளர்களும் படப்பிடிப்பு அரங்குக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வலிமை படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்று அறிவிக்கவில்லை. ஆனால், அஜித்திற்கு ஹீரோயினாக யாமி கௌதம், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி வருகிறது. ஆர் எக்ஸ் 100, கேங்க் லீடர், 90 எம் எல் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா என்பது குறிப்பிடத்தக்கது. 
 

dabaang


நடிகர் அஜித் இப்படத்தில் போலீஸாகவும், பல நாட்கள் கழித்து கருப்பு டை போட்டுக்கொண்ட தோற்றத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்த வருட தீபாவளி பண்டிகைக்கு வலிமை படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'திரியும் நெருப்பும் காதல் கொண்டால்...' - மீண்டும் கமலுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்

Published on 06/10/2023 | Edited on 06/10/2023

 

Harris Jayaraj in kamal vinoth movie

 

கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். 

 

இதனை முடித்துவிட்டு தனது 233வது படத்திற்காக அ. வினோத்துடன் கைகோர்த்துள்ளார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்காகத் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் கமலின் வீடியோ சமீபத்தில் வெளியானது. இப்படம் அரசியல் கதைக் களத்தை மையமாகக் கொண்டு உருவாவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனது 234வது படத்திற்காக மணிரத்னத்துடன் கைகோர்த்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தையும் மணிரத்னம் தயாரிப்பு நிறுவனத்தோடு கமலின் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. 

 

இந்த நிலையில், கமலின் 233வது படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தில் பணியாற்றியிருந்தார். அதில் அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் கமலுடன் இணையவுள்ளதாகத் தெரிகிறது. 

 

 

Next Story

கமல்ஹாசன் - ஹெச்.வினோத் கூட்டணியின் புது அப்டேட்!

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

KamalHaasan233 update

 

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஹெச். வினோத். படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ச்சியாக நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய மூன்று படங்களை இயக்கினார். மூன்று படங்களுமே வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்ற படங்களாகும். அதற்கு பிறகு முன்னணி நடிகர்கள் பலர் இயக்குநர் ஹெச். வினோத்தை அணுகி தனக்கு ஒரு கதை பண்ணுமாறு அணுகி வந்தனர். 

 

நடிகர் கமல்ஹாசனும் புதிய தலைமுறை இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் கொண்டிருக்கிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குநர் ஹெச். வினோத் - நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்நிலையில்  இப்படத்திற்காக துப்பாக்கி சுடும் பயிற்சியில் கமல்ஹாசன் ஈடுபடும் வீடியோ ஒன்றை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் பலவகையான துப்பாக்கிகளை கமல்ஹாசன் சுட்டு பயிற்சியில் ஈடுபடுகிறார். இது கேங்ஸ்டர் கதையா? அல்லது காவல்துறை சம்பந்தமான கதையா என்பது குறித்த அப்டேட் விரைவில் வரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.