Skip to main content

'மிஸ் தமிழ்நாடு' ரக்‌ஷயா - கட்டிட தொழிலாளி மகள் சாதனை

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

miss tamilnadu rakshaya construction worker's daughter achievement

 

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மனோகர். கட்டிட தொழிலாளியான இவருக்கு ரக்‌ஷயா (20) என்ற மகள் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்திருக்கும் ரக்ஷயா, சிறு வயதில் இருந்தே அழகிப் போட்டியில் பங்கேற்று பட்டம் பெற வேண்டும் என்று இலட்சியம் கொண்டவராக இருந்துள்ளார். அதற்காக பகுதி நேர வேலை செய்து கொண்டே தன்னை தயார்ப்படுத்தியும் வந்துள்ளார். 

 

அதன் படி கடந்த 2018ம் ஆண்டு, ‘மோனோ ஆக்டிங்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதற்காக அரசு சார்பில் மலேசியா அழைத்து செல்லப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இதனையடுத்து Forever Star India Awards கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வானார். பின்பு அங்கிருந்து மாநில அளவிலான அழகிபோட்டி கடந்த 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த போட்டியில் ரக்‌ஷயா '‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்று அசத்தினார். 

 

மேலும் வருகிற டிசம்பர் மாதம் 'மிஸ் இந்தியா' போட்டி நடைபெறவுள்ளது. அதில் அனைத்து மாநிலங்களிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் தேர்வாகியுள்ளனர். இந்த போட்டியில், நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்வேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ‘மிஸ் தமிழ்நாடு’ ரக்‌ஷயா. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மிஸ் இந்தியா பட்டம் வென்ற கர்நாடக அழகி

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

Sini Shetty crowned Femina Miss India World 2022

 

விஎல்சிசி ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நேற்று(3.7.20220) நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து 31 மாடல் அழகிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடிகைகள் நேஹா தூபியா, மலாய்கா அரோரா, நடிகா் டினோ மோரியா, வடிவமைப்பாளா்கள் ரோகித் காந்தி, ராகுல் கன்னா, நடன இயக்குநா் ஷியாமக் தவாா், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் இறுதிச் சுற்றின் நடுவா்களாக இருந்தனர்.

 

இந்த போட்டியில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சினி ஷெட்டி என்பவர்  "ஃபெமினா மிஸ் இந்தியா 2022" பட்டத்தை தட்டிச்சென்றார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரூபல் சவுகான் முதல் ரன்னர் வெற்றியாளராகவும், உத்தரப்பிரதேசத்தின் ஷினாதா சவுகான் இரண்டாவது ரன்னர் வெற்றியாளராகவும் தேர்வாகினர்.

 

மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதன் மூலம்  71 வது உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள  சினி ஷெட்டி தேர்வாகியுள்ளார். இதனை தொடர்ந்து சினி ஷெட்டிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 

 

 

Next Story

மிஸ் இந்தியா போட்டியில் இருந்து விலகிய பிரபல தமிழ் நடிகை

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

Shivani Rajasekhar announces withdrawal from  Miss India 2022

 

அன்பறிவு படத்தின் மூலம் திரைத்துறையில் கதாநாயகியாக  அறிமுகமான ஷிவானி ராஜசேகர் சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் கதாபாத்திரம் பலரின் கவனத்தையும் பெற்றது. பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகர் மகளான ஷிவானி ராஜசேகர் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். 

 

ஷிவானி ராஜசேகர் இந்தாண்டிற்கான மிஸ் இந்தியா 2022 போட்டியில் தமிழ்நாடு சார்பாகக் கலந்துகொள்வதாக இருந்த நிலையில் தற்போது அந்த போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், "எனது மருத்துவ படிப்பிற்கான தேர்வுகள் இருப்பதாலும் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் அழகு போட்டிக்கான பயிற்சியில் சரிவர ஈடுபட முடியவில்லை. நான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அதனால் இந்த போட்டியிலிருந்து விலகுகிறேன். விரைவில் நலம் பெற்றுத் திரும்பி வருகிறேன். அடுத்தாண்டு கண்டிப்பாக மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.