Advertisment

“தேவையில்லாமல் ஸ்டைலாக ஊர் சுற்ற மாட்டோம்”- மிர்ச்சி சிவா ட்ரெண்டிங் வீடியோ

நாளுக்கு நாள் கரோனா தீவிரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் உலகளவில் உயர்ந்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் நடிகர் மிர்சி சிவா காமெடியாக கரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

Advertisment

mirchi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அதில், "வணக்கம்... ஏன், எதற்காக நாங்க அப்படி என்ன தப்பு பண்ணினோம். புரிகிறது, உனது எண்ணம் கேட்கிறது, யாரோ எங்கேயோ தப்பு பண்ணியதற்காக இப்படி எல்லாரையுமேவா, உலகம் ஃபுல்லாவா. போதும், நிறுத்திக் கொள்வோம். உன்னைப் பார்த்தால் டீசன்டாக தெரியுது. உன்கிட்ட ஒரு க்யூட்னஸ் இருக்கு.

சரி. நாங்கள் இனிமேல் வீட்டிலேயே இருப்போம். தேவையில்லாமல் ஸ்டைலாக ஊர் சுற்ற மாட்டோம். முக்கியமாகச் சுற்ற மாட்டோம். இறுதியாக, இந்த உலகத்தில் உண்மையான அன்பு மட்டும்தான் எப்போதுமே காப்பாற்றும். நாங்கள் எல்லாம் அன்பாக ஒற்றுமையாக இருப்போம். தயவுசெய்து நீ வந்த வேகத்திலேயே போய்விடு. தயவுசெய்து போய்விடு...” என்றவுடன் கனவிலிருந்து விழிக்கிறார் சிவா.

அதன்பின் படுத்துக்கொண்டே, “தயவுசெய்து போய்விடு, எவ்வளவு மருத்துவர்கள், எவ்வளவு மருத்துவ ஊழியர்கள், அரசாங்க அதிகாரிகள், காவல்துறையினர் இரவு பகலாகப் பணிபுரிகிறார்கள். ப்ளீஸ் கோ கரோனா, கோ கரோனா...” என்றார்.

இதனை அடுத்து.. ஒரு பெண் குரல் கேட்கிறது. உடனே சிவாவும் கண்விழித்து விடுகிறார். பெண் குரல்..

“டேய்.. சிவா எழுந்தாச்சா.. யார் கூட பேசிக்கிட்டு இருக்க.. குப்பை போட வேண்டும், வீடு கூட்ட வேண்டும், பாத்திரங்கள் எல்லாம் அப்படியே இருக்கு பாரு.. சீக்கிரம் சீக்கிரம்...” என்று அந்தப் பெண் குரல் கேட்டவுடன் சிவா திருதிருவென முழித்துக்கொண்டு போர்வையால் இழுத்து மூடிக்கொள்வார்.

தற்போது இந்த விழிப்புணர்வு வீடியோவானது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் மற்றும் வைரலாகி வருகிறது.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe