பல வருடங்களாக சர்ச்சைகளை ஏற்படுத்தியே பிரபலமானவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதேபோல தனது பிறந்தநாள் அன்று, பிரபல நடிகர் மிலிந்த் சோமன் பீச்சில் நிர்வாணமாக ஓடி, அதை புகைப்படமாக எடுத்து பதிவிட்டு தனக்கு தானே வாழ்த்து தெரிவித்து கொண்டார். இதற்கு பெரிதாக சர்ச்சைகள் வெடிக்கவில்லை, பலரும் பாராட்டுக்களையே தெரிவித்தனர். இந்நிலையில், தெற்கு கோவா போலீசார் மிலிந்த் மீது தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.