Skip to main content

கார்த்திக்குடன் இணைந்து படம் பண்ண ஆசை - விருப்பம் தெரிவித்த இரட்டை இயக்குநர்கள்

Published on 16/03/2023 | Edited on 16/03/2023

 

 Memories tamil movie directors interview

 

இரட்டை இயக்குநர்கள் ஷ்யாம்-பிரவீன் மற்றும் 'மெமரீஸ்' படக்குழுவுடன் நக்கீரன் ஸ்டூடியோ சேனலுக்காக ஒரு ஜாலியான சந்திப்பு நடந்தது. அப்போது அவர்களின் எதிர்கால புராஜெக்ட் பற்றியும் ஐடியாக்கள் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள்.

 

13 வருடங்களாக சினிமா எடுக்க வேண்டும் என்கிற துடிப்போடு, கதை மற்றும் தயாரிப்பாளர் செட்டாகி, படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களில் கோவிட் லாக்டவுன் ஏற்பட்டது. எதிர்காலம் குறித்த கேள்வி அந்தக் காலத்தில் இருந்தது. ஆனால் அந்த நேரத்தை ஸ்கிரிப்டில் சில மாற்றங்கள் செய்வதற்கு நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். அடுத்து என்ன நடக்கும் என்று மக்களை எதிர்பார்க்க வைக்கும் அளவுக்கு நல்ல திரைக்கதை அமைந்தது

 

இந்தப் படத்தின் திரைக்கதையோடு ஆடியன்சால் ஒன்றி பயணிக்க முடியும். அவர்களும் தங்களைப் படத்தில் உள்ள ஒரு கதாபாத்திரமாக உணர்வார்கள். படம் அவ்வளவு விறுவிறுப்பாக இருக்கும். சரத்குமார் சாரின் 150வது படத்தையும் நாங்கள் தான் செய்துகொண்டிருக்கிறோம். மெமரீஸ் படத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு விதமான இசையை வழங்கியிருக்கிறோம். அந்த அளவுக்கு இந்தப் படத்தில் இசைக்கு முக்கியத்துவம் இருக்கிறது.

 

ஓடிடியின் வருகையால் மக்கள் பல்வேறு வகைகளிலான உலகப் படங்களைப் பார்க்க முடிகிறது. எங்களுடைய படத்தை மக்கள் புரிந்துகொள்வதற்கும் பல திரைப்படங்கள் பார்த்து அவர்களுடைய ரசனை மேம்பட்டது உதவிகரமாக இருக்கிறது. இதுவரை சைக்கலாஜிக்கல் திரில்லர் வகையிலான படங்கள் பல வந்துள்ளன. அவற்றுள் மக்களுடன் கனெக்ட் செய்ய முடிந்த படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. அப்படிப்பட்ட ஒரு படமாக மெமரீஸ் இருக்கும். புதிய விஷயம் ஒன்று இதில் இருக்கிறது. அது சஸ்பென்ஸ்.

 

இரட்டை இயக்குநர்களாக இருந்தாலும் எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. இருவருடைய கருத்துகளுக்கும் இருவரும் மதிப்பளிக்கிறோம். அனைத்தையுமே விரிவாக விவாதித்து தான் நாங்கள் செய்கிறோம். நீண்டகால நண்பர்களாக இருப்பதும் புரிதலுக்கு ஒரு முக்கியக் காரணம். கமல் சாரை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். நாம் சினிமாவில் இப்போது சொல்ல முயற்சிக்கும் விஷயங்களை அவர் எப்போதோ சொல்லிவிட்டார். தமிழில் அங்காடித்தெரு, கோலிசோடா, விக்ரம் போன்ற படங்களை வியந்து பார்க்கிறோம். கார்த்திக் சாரோடு படம் பண்ண வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதற்காகக் காத்திருக்கிறோம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள் தான் வரும்” - ஜியோ பேபி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
joe baby speech at pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் நேற்று இயக்குநர்கள் ஹலிதா ஷமீம், ஜியோ பேபி, தரணி ராஜேந்திரன், பி.எஸ் மித்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.  

அப்போது, ஜியோ பேபி அவர் இயக்கிய  தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் குறித்து பேசுகையில், “வித்தியாசமான ஜானரில் படமெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியான படம். முதலில் இப்படம் எல்லா பிரதான ஓடிடி தளங்களிலும் நிராகரிக்கப்பட்டது. சாட்டிலைட் சேனல்களிலும் நிராகரிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் நிதி நெருக்கடியில் இருந்தோம். எப்படி வெளிக்கொண்டு வருவதென தெரியவில்லை. யாரும் சப்போர்ட் பண்ணவில்லை. அதன் பிறகு நீ ஸ்ட்ரீம் என்ற புதிய தளம் உதவினார்கள். அதனால்தான் படம் வெளிவந்தது. படம் வந்த பிறகு பெரும்பாலும் பெண்களால்தான் இப்படம் பேசுபொருளானது. சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை உருவாக்கியது.  அதன் பிறகு நிராகரிக்கப்பட்டவர்களிடமிருந்து அழைப்புகள் வந்தது. இந்தப் படத்தை நிராகரித்த அனைவர்களும் ஆண்கள் தான். 

joe baby speech at pk rosy film festival

தொடர்ந்து பெண்ணியம் சம்மந்தபட்ட படங்கள்தான் எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் அவ்வுளவுதான். அதில் பெண்ணியவாதம் மாதிரியான படங்களும் இருக்கும். சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள்தான் வரும். அதை நான் பண்ணவில்லையென்றாலும் வேறு யாராவது பண்ணுவார்கள்” என்றார்.