Skip to main content

அஜித்தை வைத்து எடுக்காத படம், விஜய்யுடன் நடித்த படம்... - இயக்குனர் மகேந்திரனின் இறுதிக்காலம்

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் போன்று மக்கள் மனதில் நீங்காத படங்களை கொடுத்தவர். ரஜினிகாந்தின் ஸ்டைலை மட்டுமே நம்பி படம் எடுத்தவர்கள் மத்தியில் ரஜினியின் நடிப்புக்கு தீனிப் போட்டவர். பல படங்களில் விரலை உயர்த்தி, கண்ணை உயர்த்தி பஞ்ச் வசனங்கள் பேசி வந்த ரஜினியை சாதரணமாக  ‘கெட்டப் பையன் சார் இந்த காளி’ என்று பேச வைத்து அதையும் மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்தவர்தான் இயக்குனர் மஹேந்திரன். இப்படி தன்னுடைய படங்களுக்கென தனி ஒரு பாதையை வகுத்திருந்தார். அக்காலகட்டத்தில் நாடகத் தன்மையாக இருந்து வந்த தமிழ் சினிமாவை ரியாலிட்டி சினிமாவாக மாற்ற முயற்சித்த ஒருசிலரில் இவரும் ஒருவர். இதனால்தான் இவரை மக்களின் இயக்குனர் என்றும் கூட சிலர் அழைக்கிறார்கள். 
 

mahe

 

 

பல நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்த மஹேந்திரன், இன்று காலை காலமானார். பள்ளிக்கரணையிலுள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மஹேந்திரன் திரையுலகில் கதை எழுத்தாளராக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். பின்னர், 1978ஆம் ஆண்டு முள்ளும் மலரும் படத்தில் இயக்குனராக அறிமுகமாகினார். 1992ஆம் ஆண்டு வரை இயக்குனராக வலம் வந்தவர். பெரிய இடைவேளைக்கு பிறகு 2006ஆம் ஆண்டு  ‘சாசனம்’ என்றொரு படத்தை இயக்கினார். இப்படத்தில் அரவிந்த் சாமி, கௌதமி, ரஞ்சிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாக இருந்த சமயத்தில் இயக்குனர் மஹேந்திரன் ஒரு பேட்டியில்,  “எனக்கு அஜித்தை வைத்து ஒரு ஸ்போர்ட்ஸ் படம் எடுக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு பின் எந்த ஒரு செய்தியும் அது குறித்து வெளியாகவில்லை.
 

mahei

 

 

இதனையடுத்து ‘உதிராதப்பூக்கள்’ என்ற தலைப்பில் கருணாஸை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டது. பெரிய இடைவேளைக்கு பின்னர் திரையுலகிற்கு வந்தவர் மீண்டும் ஒரு இடைவேளை எடுத்துக்கொண்டார்.

2005ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான  ‘சச்சின்’ படத்தை இயக்கியது மஹேந்திரனின் மகன் ஜான்தான். இந்த படத்திலிருந்தே இயக்குனர் மஹேந்திரனுக்கும் விஜய்க்கும் நட்பு இருந்ததா என தெரியவில்லை. இதுவரை இயக்குனராக திரையுலகிற்கு தெரியவந்த மஹேந்திரன் 2016ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான  ‘தெறி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக தமிழ் திரையுலகில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். தெறி இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு மகா நடிகன், தன்னுடைய உயரத்தை பற்றி நினைக்காமல் செட்டில் மிகவும் அமைதியாக இருப்பவர், அவருடைய படத்தில் என்னை வில்லனாக நடிக்க வைக்க ஒப்புக்கொண்டது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது என்று விஜயை புகழ்ந்து பேசினார். தெறி படத்தில் மஹேந்திரனுடைய நடிப்பு வெற்றியடைய, தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ரஜினியை வைத்து இயக்கியவர், கடைசியாக அவரின் ‘பேட்ட’ படத்தில் ரஜினி உடன் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்தும்விட்டார். 

எழுத்தாளர், இயக்குனர், நடிகர் என கால் பதித்த துறைகள் அனைத்திலும் வெற்றிக்கொடி நாட்டிய இவர் இன்று தான் நேசித்த திரையுலகை பிரிந்து சென்றிருந்தாலும், இவரின் படைப்புகள் திரையுலகம் உள்ள வரை இவரின் பெயரை உச்சரிக்க வைத்துக் கொண்டே இருக்கும் என்பதே நிதர்சனம்.

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.