Skip to main content

“எனக்கு டார்ச்சர் தொடர்கிறது”-பிரதமர் மோடியின் உதவியை நாடும் பிக்பாஸ் மீராமிதுன்...

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

மீரா மிதுன் இந்த வருட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சேரனுடைய மேன்ஹேண்ட்லிங் சரியாக இல்லை என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். அதன்பின் போட்டியில் இருந்து வெளியேறினார். பிபி வீட்டிற்குள் சென்றபோதும், அங்கிருந்து வந்ததில் இருந்தும் மோசடி குற்றச்சாட்டுகள் மீரா மிது வைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து மீரா மிதுன் தன்னுடைய மேனேஜருடன் உரையாடும் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அதில் ஜோ மைக்கெல் என்ற தொழிலதிபரை கொலை செய்யுமாறு பேசியிருப்பார். இதன்பின் மீரா மிதுன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 

narendra modi

 

 

பிபி வீட்டைவிட்டு வெளியே வந்தபின்னர் பல விஷயங்கள் குறித்து சர்ச்சையாக பேசி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர்கள் தனது போன் நம்பரை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாகவும் இதனால் தேவையில்லாத போன் கால்கள் வருவதாக கூறினார். இதுகுறித்து புகார் கொடுத்தும் போலீஸ் எந்தவித நடவடிக்கைவில்லை என்று பேட்டியளித்தார். ஜெயலலிதா இறந்தபின்னர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கருத்து தெரிவித்தார். 

இந்நிலையில் நேற்று எழும்பூர் காவல் நிலையத்தில் இருந்து மீரா மிதுனிடம் சப் இன்ஸ்பெக்டர் பேசியதாகவும், அவர் தன்னிடம் ரூடாக நடந்துகொண்டதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ஆதாரங்களை சில ஊடகங்களுக்கு ஷேர் செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

இதனைதொடர்ந்து, “எனக்கு அநீதி இழைத்த சென்னை போலீசார் அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கவில்லை. ஆனால் சீர்குலைவை பாதுகாக்கிறார்கள். போலீசார் சட்டத்தை அமல்படுத்தும் போது அந்த சட்டத்தை பின்பற்றவும் வேண்டும். ஒராண்டாக எனக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இன்னும் எனக்கு டார்ச்சர் தொடர்கிறது” என்று இந்திய பிரதமர் மோடிய ட்விட்டரில் டேக் செய்து முறையிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.