Skip to main content

“அந்த வீடியோவை வெளியிட்டா, எதிர்கொள்ளத் தயாரா?” - இயக்குனரை மிரட்டும் ‘பிக்பாஸ்’ மீரா மிதுன்

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

அருண் விஜய் தடம் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீனின் அக்னிச்சிறகுகள் படமும் ஒன்று. விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். இந்த படத்தில் அருண் விஜய்யுடன் சேர்ந்து முதன்மை கதாபாத்திரத்தில் பிக்பாஸ் மீரா மிதுன் நடிக்க இருப்பதாக மீரா மிதுன் சமூக வலைதளங்களில் தெரிவித்துவந்தார். ஒருமுறை அருண்விஜய்யுடன் இணைந்து புகைப்படத்துடன் இந்த தகவலை மீராமிதுன் ட்விட்டரில் அறிவித்திருந்தார். 
 

meera mithun

 

 

ஆனால், சமீபத்தில் அக்னிச் சிறகுகள் குழு பிரதான காட்சிகளை ஷுட் செய்வதற்காக இயக்குனர் நவீனுடன் ரஷ்யா விரைந்தது. அதில் கமல்ஹாசனுடைய இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் இணைந்திருந்தார். எனக்கு பதிலாக அக்‌ஷராஹாசனை நடிக்க அழைத்து சென்றுள்ளனர் என்று மீரா மிதுன் இயக்குனர் நவீன் மீது காட்டமாக ட்வீட் செய்திருந்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பதிவில்,  “ ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு பதிலாகத் தான் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார். அவர் தான் முதன்மை நாயகி. மீரா மிதுன் முதன்மை நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படவில்லை. எனக்குத் தெரியாமலேயே பத்திரிகைகளில் நான் படத்தில் இருப்பதாகச் சொல்லி வருகிறார். முதலில் இதை ஒரு விவகாரமாக்க நான் விரும்பவில்லை. ஆனால் இப்போது...." என்று தெரிவித்துள்ளார்.

நவீனின் இந்த ட்வீட்களுக்கு மீரா மிதுன், "உங்களுக்கு இந்தப் பேட்டி ஞாபகம் இருக்கிறதா?. இந்த விவகாரத்தில் ஊடகமும் பொய் சொல்கிறது என்கிறீர்களா? ஏஞ்சலினா ஜுலி போல நடிப்பதற்கு சில காட்சிகளை வேறு என்னிடம் காட்டி பேசினீர்கள். உங்களுக்கு அது மறந்துவிட்டால், நான் சொல்லட்டுமா இயக்குநர் நவீன் சார்.

தொடர்ச்சியாக இவ்வாறு பொய் சொல்லிக் கொண்டே இருந்தீர்கள் என்றால், இது தொடர்பாக வீடியோ ஆதாரமும் என்னிடம் உள்ளது. அதை ஊடகத்திடம் வெளிப்படுத்துவேன். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தான் என்னை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்து, உங்களைச் சந்திக்கச் சொன்னார். நீங்கள் ஒரு பெரிய பொய்யர். இந்தப் பேட்டியை அளித்தது நீங்கள் தான். ஒரு ஆணாக உண்மையைப் பேசுங்கள். அல்லது உங்களுக்கு ஞாபக மறதி நோய் இருக்கிறதா. நல்ல ஒரு மனநல மருத்துவரைப் பாருங்கள்” என்றார். 

இதற்கு பதிலளித்த நவீன், “ஆணாக இருப்பதைப் பெருமையாக நினைத்துக் கொள்ளும் ஆள் நான் இல்லை. என்னைவிட பெண்களான எனது அம்மா, அக்கா, மனைவி அனைவருமே துணிச்சல் மிக்கவர்கள். உங்களுக்கு எதோ பெரிய பிரச்சனை இருக்கிறது தயவு செய்து மருத்துவரை அணுகுங்கள். உங்களுடைய முட்டாள்தனமான ட்வீட்களுக்கு இதுதான் என்னுடைய கடைசி பதில்” என்று கூறினார்.

நவீனின் இந்த ட்வீட்டுக்கு கடும் கோபமாக, "மைண்ட் யுவர் வேர்ட்ஸ். ஒரு பெண்ணை மருத்துவரைச் சென்று பார்க்கச் சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. உங்களுக்கும் எனக்கும் நடந்த படம் தொடர்பான உரையாடல்கள் வீடியோவாகவும் ஆடியோவாகவும் இருக்கிறது. அதை நான் வெளியிட்டால் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பப் பெண்களையும் பாதிக்கும். வெளியிடட்டுமா? அதை எதிர்கொள்ள உங்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா?" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் மீரா மிதுன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உண்மையிலேயே என் பொண்ண காணுங்க'-மீரா மிதுனின் தாய் புகார்

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

'Really my daughter missing' - Meera Mithun's mother complains

 

மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார். அது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீரா மிதுன் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

 

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தொடர்ந்து பலமுறை மீரா மிதுன் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். மீண்டும்  கடந்த 19.10.2022 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை மீராமிதுன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் எனவும் அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் தனது மகளின் செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருப்பதாகவும் தனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் மீரா மிதுனின் தாய் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

நடிகை மீரா மிதுன் வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு!

Published on 23/06/2022 | Edited on 23/06/2022
court postponed meera mithun case

 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடைச் சட்டம், கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

 

இந்நிலையில் இது தொடர்பான விசாரணைக்காக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகிய இருவரும்  ஆஜராகச் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று(22.6.2022) நீதிமன்றத்தில் ஆஜரான அவர்களிடம் குற்றப்பத்திரிகையை நீதிபதி படித்துக் காட்டியதோடு, அது தொடர்பாகக் கேள்வியும் எழுப்பியிருந்தார். இதற்கு தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்த நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் அபிஷேக் ஆகிய இருவரும் இது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளவதாக கூறியுள்ளனர். இதையடுத்து நீதிபதி வழக்கின் விசாரணையை அடுத்த மாதம்(ஜூலை) 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.