Skip to main content

“சேரனுக்கு ரெண்டு பொண்ணு இருக்கு, கமலுக்கு ரெண்டு பொண்ணு இருக்கு”- பிக்பாஸ் மீரா சர்ச்சை பேச்சு

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

பிக்பாஸ் மீரா மிதுன் கடந்த இரண்டு நாட்களாக தினசரி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி தனக்கு என்ன நேர்ந்தது என்று தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சேரன் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். “சேரன் சார் தற்போது அவர் மிகவும் புனிதமானவராக திகழ்கிறார். இதே மாதிரி ஜோடி நம்பர் 1ல் இருந்த ஆசிஃப் என்பவர் நான் உள்ளே இருந்தபோது என்னை பற்றி சைகோ என்று தேவையில்லாமல் பேசியிருக்கிறார். ஒரு பெண்ணுக்கு தெரியும் எது குட் டச், எது பேட் டச் என்று. அந்த நிகழ்ச்சியை ஹாட்ஸ்டாரில் பாருங்கள் நன்றாக தெரியும், என்ன பிடிக்காமல் கீழே விட்டுவிடுவார். நல்லவேளையாக எனக்கு எந்த அடியும் படவில்லை. இந்த மாதிரி பல தவறுகள் ஆசிஃப் செய்திருக்கிறார். இப்போது அவருடைய பப்ளிசிட்டிக்காக இதெல்லாம் செய்துகொண்டிருக்கிறார். சேரன் சார் நல்லவர் முத்திரை குத்தப்பட்டதனால் ஏற்கனவே கெட்டவன் என பெயர் எடுத்த ஆசிவ் வெளியே வந்து தன்னை நல்லவராக காட்டிக்கொண்டிருக்கிறார்.
 

meera mithun

 

 

மீண்டும் சேரன் சார் பற்றி பேசுவோம். நான் பொண்ணுங்கள தெய்வமா மதிக்கிறேன், நான் பெண்களுக்கு கைகூட கொடுக்க மாட்டேன். நீங்க டி.ராஜேந்தர் சார் படம் பாத்திறுக்கிங்களா மீரா, அந்த மாதிரிதான் நானு. ஆனால், நான் அந்த வீட்டில் பார்த்த வரைக்கும் எல்லா பொண்ணுங்க மேலும் விழுந்து விழுந்து கட்டிபிடிச்சிட்டு நெருக்கமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அது எப்படி எனக்கு தெரியவில்லை.

சேரன் சார் என்னிடம் என்ன எதிர்பார்த்தார் என்றால் நான் ஒரு இயக்குனர், என்னை எல்லாரும் மதிக்க வேண்டும் நினைத்தார். அதை பற்ரி சரவணன் சார் கூட தெரிவித்திருக்கிறார். அங்கிருக்கும் சக போட்டியாளர்கள் அனைவரும் இவரை பகைத்துக்கொள்ள கூடாது என்று ஐஸ் வைத்தனர். இவர் ஒரு இயக்குனர் அதனால் ஜால்ரா போட்டால் எதுவும் சான்ஸ் தருவார் என்று நினைத்தார்கள். 

நான்கு வாரம் அனைவராலும் கார்னர் செய்யப்பட்டு மக்களின் வாக்குகளை வாங்கி உள்ளே இருந்தேன். இதுவரை யாருக்கும் நடக்காத ஒன்று வெளியே இருந்து கமல் சார் உள்ளே வந்து, எனக்கு பந்து கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள். அடுத்த வாரம் சேரன் சாரினால் என்னுடைய நிலைமை வேறாக மாறியது. நான் அந்த மாதிரி மேன் ஹாண்டிலிங் நடந்தது சொன்ன விஷயத்தை, வேறாக சித்தரித்துவிட்டார். சேரன் சார்தான் ஒரு நல்ல இயக்குனர், நல்ல திரைக்கதை ஆசிரியர் ஆச்சே அப்படியே அந்த விஷயத்தை வேறாக மாற்றிவிட்டார்.  ‘ஐயோ நான் ரெண்டு பொண்ணுக்கு அப்பா, இப்படியெல்லாம் பண்ணமாட்டேன், வெளியே சென்றால் என் வாழ்க்கை என்னாவது’என்று நடித்து, அழுது அங்கிருக்கும் அனைவரையும் நம்ப வைத்தார். அந்த பிபி ஹவுசில் ஒருத்தர்கூட எனக்கு ஆதரவாக இல்லாமல் நின்றனர். அங்கிருக்கும் ஆம்பளைங்க எல்லாரும் சரியான கோழைகள். 

ரெண்டு பொண்ணு வச்சிருக்க சேரன் சார்தான் இதை செய்தார். ரெண்டு பொண்ணு வச்சிருக்க கமல்சாரும் எனக்கு நியாயம் தரவில்லை. அவர் ஏன் என் தரப்புல இருக்கிற நியாயத்த பார்க்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. இதே அவருடைய ரெண்டு பொண்ணுங்களுக்கு நடந்திருந்தா என்ன பண்ணிருப்பாரு தெரியவில்லை. எனக்கு அப்பா இல்லை, அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். எங்க அப்பா இருந்திருந்தார் சீனே வேற, என்ன பண்ணிருப்பாரு தெரியாது. தமிழ்நாடுல இருக்கிற சிங்கிள் டாக்டர் எல்லம் இப்படிதான் எதிர்கொள்கிறார்கள் போல. 

 


மீடூ இயக்கம் இங்கிலாந்து தொடங்கியது, புகார் வைத்தவரிடம் நியாயம் கேட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் உடனடியாக வேலையைவிட்டு தூக்கப்பட்டார்கள். இது பாலிவுட்டில் கூட நடந்தது. ஆனால், சின்மயி மேடம் புகார் வைத்தபோது அவரை ட்ரோல்தான் செய்தார்கள். நான் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தேன் சின்மயி எனக்காக சப்போர்ட் செய்திருந்தார்கள். “அவங்க மேன்ஹாண்டிலிங் என்றுதான் சொன்னார்கள் எந்த இடத்திலும் அவர் தப்பா தொட்டாரு என்று சொல்லவில்லை” என்று நான் சொன்னதை புரிந்துகொண்டு சரியாக சொன்னார் சின்மயி.

சேரன் எனக்கு எவ்வளவு மெண்டல் டார்ச்சர் கொடுத்தார் என்று உங்களுக்கு நினைவுப்படுத்த நினைக்கிறேன். என்னிடம் வந்து உனக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது, என்னுடைய ட்ரெஸ்ஸிங் குறித்து சொல்றது. ஆனால், என்னவிட கவர்ச்சியாக ஆடை அணிகிற பெண்களுடன் மேலே மேலே போய் விழுறது. சேரனால் என்ன நேரில் பார்த்தால் நேராக நிற்கக்கூட முடியாது. அவருக்குதான் தாழ்வுமனப்பான்மை அவருக்குள்ள. அவர் என்கிட்டையே வந்து உங்க அப்பா உன்ன தப்பா வளர்த்திருக்கிறார் என்று கூறினார். இவர் யாரு எங்க அப்பா பேசுறதுக்கு. இந்த மாதிரி நிறைய விஷயம் உள்ள பண்ணிருக்காரு சேரன். இப்போ வந்து ரொம்ப நல்லவரா, புனிதமானவரா வெளியே சுத்திக்கிட்டு இருக்கார். தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரு பொண்ணு இப்படி நடந்திருக்கிறது என்று சொன்னால் அந்த பெண் மீதே பிரச்சனைகளை திருப்பிவிடுறீங்க. ஒரு பொண்ணு என்ன லூசா தேவையில்லாம இப்படியெல்லாம் பேசி பப்ளிசிட்டி வாங்குறதுக்கு. எனக்கு புகழ் வாங்க வேண்டும் என்றால் ஒரு போட்டோஷுட் புகழ் வந்துவிடும், அவ்வளவுதான். இந்த மாதிரியெல்லாம் சீப்பாக பப்ளிசிட்டி வாங்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கு கிடையாது. நான் ஒரு பொண்ணுதான் போல்டானவள், எனக்கு என்ன நடந்ததோ அதை பயமில்லாமல் வெளியே சொல்லக்கூடியவள். வேறு வெளியே சொல்ல தைரியம் இல்ல சொல்றதுக்கு. அங்க அத்தனை ஆம்பளைங்க இருந்தாங்க, அனைவரும் என்ன நடந்தது, ஏது நடந்தது கூட கேட்காம சேரனுக்குதான் சப்போர்ட் செய்தார்கள். சேரன் என்னிடம் நேராக வந்து மன்னிப்பு கேட்கவில்லை, பொதுவாக எல்லாரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்றுதான் கூறினார். சேரன் சார் மனசாட்சிக்கு தெரியும் அவர் என்ன செய்தார் என்று காட்டமாக பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“தவறு என நினைக்கும் எந்த ஒரு செயலுக்கும் சில நியாயங்கள் உண்டு” - சேரன் பாராட்டு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
cheran about koose munisamy veerappan series

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, மற்றும் வசந்த் பாலகிருஷ்ணன் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியான டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்திருந்தார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியிருந்தது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருந்தது. 

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸ் மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டிருந்தது. சீசன் 2 வரும் என படக்குழு தெரிவித்துள்ளது. இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர்.

இந்த சீரிஸ் வெளியான சில நாட்கள் கழித்து, ஜீ5 ஓடிடி தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்ததாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. பின்பு சீரிஸீன் முதல் எபிசோடை இலவசமாக பார்க்கலாம் என சலுகை அறிவித்தது. அடுத்து யூட்யூபில் முதல் எபிசோடை மட்டும் வெளியிட்டது. இதனை தொடர்ந்து உலகளவில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளதாகவும் பின்பு 125 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டது. இப்போது 150 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை கடந்துள்ளது. 

இந்த நிலையில் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன், ‘கூச முனுசாமி வீரப்பன்’ சீரிஸை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள, எக்ஸ் பதிவில், “மிக நேர்த்தியான படைப்பு. மனிதனுக்கான பல்வேறு முகங்களை பதிவு செய்திருக்கிறது. தவறு என நினைக்கும் எந்த ஒரு செயலுக்கும் சில நியாயங்கள் உண்டு. குறிப்பாக அதில் பெண்களின் உணர்வுகளை அவர்கள் சகிக்கமுடியாத வலிகளை கடந்தும் வாழ்க்கையை எதிர்கொண்டு நிற்கிற தன்மையை இயக்குநர், சம்பவத்தில் உண்மையாக பாதிக்கப்பட்ட மனிதர்களின் முகங்களை பதிவு செய்தது என்னை ஈர்த்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு புரட்சியாளர்கள் எப்படி அடக்குமுறைகளால் வீழ்த்தப்படுகிறார்கள் என்பதை அழகாக பதிவு செய்த இயக்குநருக்கு வாழ்த்துகள். இந்த வெப் டாக்யூ உருவாகக் காரணம் நக்கீரன் ஆசிரியர், தைரியமாக காட்டுக்குள் சென்று பதிவு செய்த வீடியோ. இந்தத் தொடர் உருவாக, ஒரு உண்மைக் காலம் தாண்டி இச்சமூகத்திற்கு செல்ல உதவியிருக்கிறது. அவருக்கும் பாராட்டுகள்” என குறிப்பிட்டுள்ளார்.