மாடல்அழகியும், நடிகையுமான மீராமிதுன்சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசிவீடியோவெளியிட்டார். அது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீராமிதுன்மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மீராமிதுனும்அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
பின்பு இந்த வழக்கு கடந்த 6-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டாவது குற்றவாளியான சாம் அபிஷேக் மட்டும் நேரில் ஆஜரானார். மீராமிதுன்ஆஜராகவில்லை. இது தொடர்பாக மீராமிதுனுக்குஎதிராக 2ஆவது முறை ஜாமீனில் வெளிவர முடியாதபிடிவாரண்ட்பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணை வருகிற இன்று (29.08.2022) தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிமதி ஸ்ரீதேவி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.முன்பைபோலவே இப்போதும் சாம் அபிஷேக் மட்டும் நேரில் ஆஜராகினார். அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மீராமிதுன்தலைமறைவாக உள்ளதாகவும், அதனால் அவரை தேடி வருவதாகவும். விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில்ஆஜர்ப்படுத்தப்படுவார்என்றும் தெரிவித்தார். பின்பு இந்த வழக்கு விசாரணையை நீதிமதி ஸ்ரீதேவி வருகிற செப்டம்பர் 14-ஆம்தேதிக்குதள்ளிவைத்து உத்தரவிட்டார்.