Skip to main content

த்ரிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020
meera

 

"எட்டுத் தோட்டாக்கள்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா மிதுன். மாடலிங் துறையிலிருந்து தமிழ் சினிமாவில் ஒருசில கதாபாத்திரங்களில் தோன்றினார். இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாம் சீஸனில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமடைந்தார்.

 

பிக்பாஸில் இயக்குனர் சேரன் மீது, மீரா மிதுன் அவதூறு பரப்பியபின் இவருக்கு சமூக வலைதளத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அவர் பிக்பாஸைவிட்டு வெளியேறிய பின்பும் இது தொடர்ந்தது. இதன்பின் தினசரி தன்னைத்தானே புகழ்ந்துகொண்டு, மற்றவ போட்டியாளர்களை இகழ்ந்து வீடியோக்களை பதிவிட்டார். இதுவும் சர்ச்சையை கிளப்பியது.

 

இந்நிலையில் நடிகை த்ரிஷா குறித்து மீரா மிதுன் ட்வீட் செய்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. “இனி என்னை போல ஹேர் ஸ்டைல், என்னை போன்ற தோற்றம் என மார்பிங் செய்து புகைப்படங்களை நீங்கள் எடுப்பதை கண்டால் சீரியஸாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கும்படி ட்வீட் செய்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ஊழலை ஒழிப்பேன்" - மீரா மிதுனின் புதிய அவதாரம்!

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாடலும், நடிகையுமான மீரா மிதுன், சக போட்டியாளர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காமல் விதண்டாவாதம் செய்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று கூறி பிக்பாஸ் வீட்டில் புயலைக் கிளப்பினார். இந்த விஷயத்தில் சக போட்டியாளர்கள், வெளியில் உள்ள பார்வையாளர்களும் மீரா மதுனை வெறுக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன்.

 

meera mitun

 

அதன்பிறகு தமிழகத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் காவல்துறையினர் லஞ்சம் வாங்கிக்கொண்டு வழக்குப் பதிவு செய்கிறார்கள். இங்கு சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் நான் அரசியலுக்கு வர உள்ளேன். அதிமுக கட்சி, ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சிறப்பாக இருந்தது. இப்போது ஆண் ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. பெண்கள் அமைச்சராக பதவிக்கு வரவேண்டும் என்று கொளுத்திப் போட்டார். 

 

meera mitun

 

இப்படி சர்ச்சை ராணியாக வலம் வந்துகொண்டிருக்கும் மீரா மிதுன் கடந்த சில தினங்களுக்கு முன்பு 'ஊழல் எதிர்ப்பு ஆணையம்' என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பின் தமிழக இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஊழலை ஒழிப்பேன் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். 

Next Story

நடிகை மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

 

actress meera mitun press meet issue police



சென்னை எழும்பூரில் ஹோட்டல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் மீது காவல்துறை வழக்குப்பதிவு. எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் மீராமிதுன் பேட்டியளித்த போது போலீசாரை  விமர்சித்துப் பேசியுள்ளார். பேட்டி குறித்து கேட்ட ஹோட்டல் அதிகாரி அருணுக்கு நடிகை மீராமிதுன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அருண் கொடுத்த புகார் பேரில் காவல்துறை நடவடிக்கை என தகவல்.