Skip to main content

"காந்தி, நேரு ஜெயிலுக்கு போனதில்லையா..." நடிகை மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ!

Published on 12/08/2021 | Edited on 12/08/2021

 

Meera Mitun

 

பட்டியலின சமூகத்தினரைப் பற்றி சமூக வலைதளங்களில் இழிவாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையில் சில தினங்களுக்கு முன் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மனுவில், "நடிகை மீரா மிதுன் ட்விட்டரில் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் இழிவாகப் பேசி காணொளி பதிவைப் பதிவிட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவர் பேசியதாகக் கூறப்படும் வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது.

 

அந்தப் புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது கலகத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், மீரா மிதுன் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "என்னை தாராளமாக கைது செய்யுங்கள். ஏன் காந்திஜி, நேருஜி எல்லாம் ஜெயிலுக்கு போகவில்லையா எனப் பேசியுள்ளார். மேலும், அந்த வீடியோவில், தன்னை கைது செய்யமுடியாது என்றும் அது கனவில் வேண்டுமானால் நடக்கலாம் என்றும் பேசியுள்ளார். மீரா மிதுனின் இந்தப்பேச்சை சமூக வலைதளங்களில் பலரும் கண்டித்து வருவதோடு, அவரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென போலீசாருக்கு கோரிக்கை வைத்துவருகின்றனர்.    

 

 

சார்ந்த செய்திகள்