Skip to main content

இந்த நிலைமை நமக்கு வேண்டுமா..? - நடிகை மீனா காட்டம் !  

Published on 06/04/2020 | Edited on 06/04/2020


கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது.இதனால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் நடிகர்கள் பலரும் பொதுமக்களை வீடுகளில் இருக்கும்படி வீடியோக்களின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது நடிகை மீனா கரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

jgjg

 

"இந்த உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற கரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் 'லாக்-டவுன்' செய்திருக்கிறது.ஆனால், நிறைய பேர் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டு வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்படும் போதும், தொலைக்காட்சியில் பார்க்கும் போதும் வேதனையாக இருக்கிறது.இந்த மாதிரி அரசாங்கம் சொல்வதைக் கேட்காததால் மட்டுமே இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் எல்லாம் இப்போது நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது.தினமும் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது.தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து போகிறார்கள். அமெரிக்காவில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தக் கோவிட் 19 வைரஸ் தொற்று இருக்கிறது.

 

இந்த நிலைமை நமக்கு வேண்டுமா? , இந்த நிலை நமக்கு வராமல் இருப்பதற்கு அரசாங்கம் சொல்வதைக் கேட்க வேண்டும்.எவ்வளவு நேரம் வீட்டில் உட்காருவது,டிவி பார்ப்பது, போரடிக்கிறது என்று சொல்லாதீர்கள்.வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் விளையாடுங்கள்.குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுங்கள், வீட்டு வேலைகள் பாருங்கள்.சமைக்க உதவி செய்யுங்கள். யோகா உள்ளிட்ட பல விஷயங்கள் பொழுது போக்குவதற்கு உள்ளது.வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்தது இந்த உலகத்தையே காப்பாற்றும் வாய்ப்பு அடிக்கடி அனைவருக்கும் கிடைக்காது. காமெடி எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், நீங்கள் ஜாக்கிரதையாக இருந்தால் தான் உங்கள் குடும்பம் பாதுகாப்பாக,ஆரோக்கியமாக இருக்க முடியும்.ஆகையால் வீட்டில் அனைவரும் பத்திரமாக, ஆரோக்கியமாக இருங்கள்'' எனத் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வதந்திகளுக்கு கண்டனம் தெரிவித்த மீனா

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
meena condemn about his second marriage rumours

90களில் மற்றும் 2000 தொடக்கத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், 2022 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் வித்யாசாகர் மரணமடைந்தார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. அக்குழந்தையுடன் தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார் மீனா. இதனிடையே மீனா இரண்டாம் திருமணம் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வதந்திகள் உலா வந்து கொண்டிருந்தது. அதை திட்டவட்டமாக மறுத்திருந்தார் மீனா. 

இந்த நிலையில், தனது இரண்டாவது திருமண வதந்திகள் குறித்துப் பேசிய மீனா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அவர், “இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகள் தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் வருத்தத்திற்கு ஆழ்த்தியது. தகவல்களை சரி பார்க்காமல் அதை செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும். தனது வாழ்க்கை தற்போது திருப்திகரமாக இருக்கிறது” என்றார். 

மேலும், “சமூக வலைத்தளத்தில் உண்மைகளை சொன்னால் தான் நல்லது. எனக்கு இரண்டாவது திருமணம் பற்றி எந்த சிந்தனையும் இப்போது இல்லை. அது பற்றி வெளியாகும் வதந்திகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம்'' என்று கூறியுள்ளார். மீனா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். மலையாளத்தில் ஒரு படமும் தமிழில் ஒரு படமும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

உலக கோப்பையை அறிமுகம் செய்து மீனா நெகிழ்ச்சி

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

actress meena Unveil the Cricket World Cup 2023 Trophy

 

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 50 ஓவர் கொண்ட உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. 

 

கடந்த 2011 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் உலக கோப்பை நடைபெற்ற நிலையில், அந்தாண்டு கோப்பையை கைப்பற்றியது போல், இந்த முறையும் சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்தியா ஜெயித்து விடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ரோஹித் ஷர்மா தலைமையில் வீரர்கள் களமிறங்கவுள்ளனர். 

 

இந்நிலையில் 2023 கிரிக்கெட் உலகக்கோப்பையை நடிகை மீனா பாரிசில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்தக் கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியடைந்துள்ளார்.