
பிரபல பாடகர் எஸ்.பி.பி கரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதால் வென்டிலேட்டரில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகமும், அவரது மகன் சரணும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "கோவிட்-19 தொற்று காரணமாக எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது.
அவர் விழிப்புடன் பதிலளிக்கும் நிலையில் இருக்கிறார், உடல்நிலை திருப்தியளிக்கும் வகையில் உள்ளது. இருப்பினும் அவரது தற்போதைய உடல் நிலை, தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்னும் சில நாள் அவர் இருக்க வேண்டும் என்ற தேவை இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.