Skip to main content

செம்ம க்ளாஸா வந்திருக்கும் 'மாஸ்டர்' செகண்ட் லுக் - காரணம் இதுதான்! 

Published on 15/01/2020 | Edited on 15/01/2020

'பிகிலு'க்குப் பிறகு நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'மாஸ்டர்'. தமிழ் திரையுலகின்  முன்னணி நடிகர்கள் அனைவரும் தற்போது இளம் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். இது ஒரு ட்ரெண்டாகவே பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த், பா.ரஞ்சித் படத்தில் நடித்ததன் மூலம் இதை தொடங்கி வைத்தார் என்று சொல்லலாம். தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'பேட்ட' படத்தில் நடித்தார் ரஜினி. இப்படம் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, இடையில் முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' நடித்த ரஜினி, தற்போது அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.

 

master second look

 

இன்னொரு முன்னணி நடிகரான அஜித், இரண்டே படங்கள் இயக்கிய ஹெச்.வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை', அதை தொடர்ந்து இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார். ஹெச்.வினோத், இயக்கிய முதல் இரண்டு படங்களான 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' இரண்டுமே பெரிய வெற்றியோடு பாராட்டுகளையும் பெற்றவை.


இந்நிலையில் தொடர்ந்து அட்லீ, முருகதாஸ் படங்களில் நடித்து வந்த விஜய், இரண்டே படங்கள் இயக்கிய லோகேஷ் கனகராஜை அடுத்த படம் இயக்க அழைத்தார். லோகேஷ் இயக்கிய 'மாநகரம்', 'கைதி' ஆகிய இரண்டு படங்களுமே வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்றவை. அஜித்தை இயக்கும் ஹெச்.வினோத், விஜயை இயக்கும் லோகேஷ் இருவருமே தரமான இயக்குனர்களாகப் பார்க்கப்படுபவர்கள்.

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'மாஸ்டர்' படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. தற்போது பொங்கல் தினத்தன்று ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இரண்டுமே 'இது வேற மாதிரி படம்' என்று சொல்வது போல இருக்கின்றன. இப்படி அமைந்ததன் காரணம், விஜய்யின் இயக்குனர் தேர்வு என்றே கூறப்படுகிறது. அந்தத் தேர்வு வெற்றி அடைந்ததா என்பது வரும் ஏப்ரலில் தெரிய வரும்.     

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தொடர்ந்து படம் பண்ணுங்க” - கோரிக்கைக்கு ஓகே சொன்ன விஜய்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vijay says yes to distributor sakthivelan request for to dont stop acting gilli re release celebration

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பை பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக மாற்றியது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆராவரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ் ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். 

இந்த நிலையில் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது விஜய்க்கு மாலை அணிவித்த சக்திவேலன், அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தார். “அரசியலுக்கும், மக்களுக்கும் நீங்கள் நிறைய நேரத்தை செலவிடுங்கள். ஆனால் வருஷத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்க. வியாபாரத்தை தாண்டி ரசிகர்களின் கொண்டாட்டம் தியேட்டரில் கூஸ்பம்ஸ் தருணமாக இருக்கிறது. அதனால் தொடர்ந்து படம் பண்ணுங்க” என்றார். இதனிடையே அவருக்கு பதிலளித்த விஜய், சரி என சொல்லிவிட்டு அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

vijay says yes to distributor sakthivelan request for to dont stop acting gilli re release celebration

கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தற்போது நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைப் படத்தை தவிர்த்து இன்னொரு படத்தில் நடித்து விட்டு பின்பு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

‘முடிச்சிடலாம்...’ - வெளியான ‘ரஜினி 171’ பட அப்டேட்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
thalaivar 171 titled as coolie

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில், தங்கம் கடத்தும் குடோனுக்குள், ரஜினி செல்கிறார். அங்கு அந்தக் கும்பலை அடித்துபோடுவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. சண்டை காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் ரஜினி, வசனம் பேசிக்கொண்டே அக்கும்பலை தாக்குகிறார். “அப்பாவும் தாத்தாவும், வந்தார்கள் போனார்கள். தப்பென்ன, சரியென்ன, எப்போதும் விளையாடு. அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே,... சோறுண்டு, சுகமுண்டு, மதுவுண்டு, மாதுண்டு, மனமுண்டு என்றாலே, சொர்கத்தில் இடமுண்டு” என்று அவர் ஏற்கெனவே அவர் படத்தில் பேசும் வசனம் இடம்பெறுகிறது.

மேலும் இறுதியில் ‘முடிச்சிடலாம் மா...’ ரஜினி சிரித்து கொண்டே பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் தங்க கடத்தலை வைத்து உருவாகுவது போல் தெரியும் சூழலில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.