ADVERTISEMENT

"தடுப்பூசிகள் தனிநபர்களையும், சமூகங்களையும் பாதுகாக்க வேலை செய்கின்றன" - இளம் நடிகர் வேண்டுகோள்!

01:08 PM Jun 17, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர்.

தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், குழந்தை நட்சத்திரமாக இருந்து இளம் நடிகராக உயர்ந்துள்ள நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்தியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாஸ்டர் மகேந்திரன், "தடுப்பூசிகள் தனிநபர்களையும், சமூகங்களையும் பாதுகாக்க வேலை செய்கின்றன மற்றும் உயிரையும் காப்பாற்றுகின்றன. எனவே தயவுசெய்து அனைவரும் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT