ADVERTISEMENT

'அதிருதா நெஞ்சம் அதிரனும் மாமே...' - இயக்குநருக்கு பரிசு வழங்கிய தயாரிப்பாளர்

06:21 PM Oct 30, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மாதம் 15 ஆம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது.

இதனிடையே இந்தப் படத்தின் இந்தி பதிப்பை வெளியிடுவதற்கு தணிக்கை குழு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக ஒரு பரபரப்பு புகாரை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் சிபிஐ தணிக்கை குழு அதிகாரிகள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடந்து வருகிறது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியைக் கடந்து வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் வெற்றியை முன்னிட்டு தயாரிப்பாளர் வினோத் குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT